பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.அணையில் இருந்து 3,850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்ற ப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,039 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

அணை யில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, காலிங்கராயன் பாசனத்தி ற்கு 600 கன அடி,

குடி நீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 3,850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.56 அடியாக உள்ளது.

30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.54 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.51 அடியாக உள்ளது.

மழை ப்பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் அதிக அளவில் வெளி யேற்றப்பட்டு வருவதாலும் ஈரோடு மாவட்ட அணை களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com