search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "24 cubic feet"

    • பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி குன்றி மலையடி வாரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம், கடம்பூர் உள்ளிட்ட மலை கிராமங்க ளில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்தடைகிறது.

    42 அடி உயரமுள்ள இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மூலவா ய்க்கால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு தோறும் இரு போக பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அணை நிரம்பி உபரி நீரானது நேற்றைய நிலவரப்படி 8 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொ டர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தன கிரி விவசாயிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அணையில் இருந்து இடது மற்றும் வலது என இரு மதகுகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விட்டனர்.

    இன்று முதல் 57 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளதாகவும், இரு வாய்க்கால்களிலும் வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    ×