search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக்கு மரங்கள்"

    • தூரிப்பாலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
    • கூந்தல் பனை இப்போது அதிகளவில் விற்பனை நோக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் கல்லார் மற்றும் தூரிப்பாலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் வனத்தில் இருந்து காட்டு யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை, சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு கள் இங்குள்ள விளைநிலங்க ளுக்குள் நுழைந்து பொதும க்களையும், விவசாயி களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.

    கல்லாறு பகுதியில் வாழை, பாக்கு, பலாப்பழங்கள் அதிக அளவில் உள்ளதால் காட்டு யானைகள் இதனை ருசிக்க தொடர்ந்து வனத்தில் இருந்து வெளியேறி வருகின்றன.

    இதுமட்டுமல்லாமல் திருமண மண்டபங்களில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் கூந்தல் பனை இப்போது அதிகளவில் விற்பனை நோக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை யானைகள் விரும்பி சாப்பிடுவதால் யானைகள் இதே பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக நடமாடி வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் கல்லாறு பகுதியில் உள்ள தோட்டத்தில் நின்றிருந்த 100 தென்னை மரங்கள், 60 பாக்கு மரங்கள் மற்றும் ஏராளமான கூந்தல் பனை மரங்களை சேதப்படுத்தி அட்டகா–சத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துள்ளனர்.

    ×