search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் தீவிபத்து"

    • திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.
    • காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    வெனிஸ்:

    இத்தாலி வெனிஸ் நகரின் புறநகர் பகுதியான மெஸ்ட்ரேலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 21 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    வெனிஸ் நகருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரோ மாவட்டத்தில் உள்ள ரெயில் பாதைகளுக்கு அருகில் பஸ் சாலையை விட்டு விலகி விழுந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.
    • தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது.

    மேட்டூர்:

    கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    நள்ளிரவு ஒரு மணியளவில், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

    இதை பார்த்த டிரைவர் சாலையிலேயே பஸ்சை நிறுத்திவிட்டு, பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். அதற்குள் பஸ் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    அப்போது சில பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கோவையை சேர்ந்த தாமோதரன் (வயசு 38), அவரது மனைவி வினோதினி (30), சந்தோஷ் (28) உட்பட 10 பேர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற பயணிகள் தீக்காயம் இன்றி தப்பினர்.

    இந்த சம்பவம் குறித்து மேட்டூர் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் மற்றும் கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது. இதுகுறித்து கருமலைகூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்கள் பட்டாசு வெடிப்பதும், இதில் பஸ் தீப்பிடித்து எரிவதையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது மாநில மோட்டார் வாகன அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீப்பிடித்த பஸ்சை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பஸ்சை துரத்தி சென்ற அதிகாரிகள் பஸ்சை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா புறப்பட்டனர்.

    இதற்காக 2 சுற்றுலா பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி வளாகத்தில் இருந்து 2 பஸ்களும் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது சுற்றுலாவில் பங்கேற்ற மாணவர்கள் உற்சாக மிகுதியில் பட்டாசு வெடித்தனர்.

    இதில் பட்டாசு வெடித்து சிதறியதில் பஸ்சின் மேல் பகுதி தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த பஸ் ஊழியர்கள் அவசர, அவசரமாக அதனை அணைத்தனர்.

    பின்னர் அவர்கள் மாணவர்களை ஏற்றி கொண்டு சுற்றுலா புறப்பட்டனர்.

    இதற்கிடையே மாணவர்கள் பட்டாசு வெடிப்பதும், இதில் பஸ் தீப்பிடித்து எரிவதையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது மாநில மோட்டார் வாகன அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீப்பிடித்த பஸ்சை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பஸ்சை துரத்தி சென்ற அதிகாரிகள் பஸ்சை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×