search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் கோரிக்கை"

    • தனியார் துறை ஊழியர்கள் (தகவல் தொழில்நுட்பம் உட்பட) மற்றும் அரசு துறை ஊழியர்கள் சென்னையில் பணிபுரிகின்றனர்.
    • சென்னை எழும்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு புறப்படும் நேரத்தை இரவு 8மணி முதல் 10 மணிக்குள் இருக்கும்படி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை :

    பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்துக்கு நேரடி இரவு நேர தினசரி விரைவு ரெயில் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராக பொள்ளாச்சி உள்ளது. பொள்ளாச்சி, தென்னை மற்றும் காயர் பொருட்களின் உற்பத்தியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.ஆனால் ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை, பழநி பகுதிகளில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், சென்னை தாம்பரம், எழும்பூர் ஆகிய பகுதிகளுக்கு நேரடி ரெயில் சேவை இல்லை.

    பழனி முருகன் கோவில், வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம், ஆனைமலை மாசாணி அம்மன் கோவில், உடுமலை திருமூர்த்திமலை கோவில், மூணாறு, கொடைக்கானல் உள்ளிட்ட ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் தஞ்சையில் பெரிய கோவில், சனீஸ்வரர், சுவாமி மலை கோவில்கள் உள்ளன.

    பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பழனி பகுதிகளில் இருந்து, பல ஆயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்கள் (தகவல் தொழில்நுட்பம் உட்பட) மற்றும் அரசு துறை ஊழியர்கள் சென்னையில் பணிபுரிகின்றனர்.

    தற்போது, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும், பாலக்காடு - சென்னை தினசரி விரைவு ரெயில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் நேரம் (மாலை, 4:55 மணி ) அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வசதியாக இல்லை.

    திண்டுக்கல், நாமக்கல், சேலம் வழியாக மிகவும் சுற்றுப்பாதையில் செல்வதால் பயண நேரம் அதிகமாகவும், ரெயில் கட்டணம் அதிகமாகவும் உள்ளது. அதுபோன்று, பொள்ளாச்சியில் இருந்து தொலைவான பகுதிகளான வால்பாறை,சேத்துமடை, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொள்ளாச்சி ரெயில் நிலையம் வருவதற்கு ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது.அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அலுவலக பணிகளை முடிக்க மாலை 6மணியாகும்.

    எனவே பொள்ளாச்சியில் இருந்து சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்திற்கு, பழனி, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம் வழியாக நேரடி இரவு நேர தினசரிவிரைவு ரெயில் இயக்க வேண்டும்.பொள்ளாச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்படும் நேரத்தை இரவு 8 மணி முதல் 10மணிக்குள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுபோல, சென்னை எழும்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு புறப்படும் நேரத்தை இரவு 8மணி முதல் 10 மணிக்குள் இருக்கும்படி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தபோது கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • அமிர்தா எக்ஸ்பிரஸ் உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 6.10 மணிக்கு வந்து, 6.12 மணிக்கு புறப்பட்டு பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 10 மணிக்கு சென்று சேருகிறது.

    உடுமலை : 

    உடுமலையில் முன்பு மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தபோது கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவை ராமேஸ்வரம் சென்று வந்த பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

    இந்த ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்ததால் இந்த வழித்தடத்தில் 2009-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக ரெயில் சேவை இல்லாமலிருந்தது. இந்த ரெயில்பாதை பணிகள் நிறைவடைந்த பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அகல ரெயில் பாதையாக இயங்கி வருகிறது.

    இதைத்தொடர்ந்து உடுமலை வழியாக ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை மீண்டும் இருக்கும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த வழித்தடத்தில் ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை இல்லை. இந்த நிலையில் உடுமலை ரெயில் பாதை தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது. தினசரி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 6.10 மணிக்கு வந்து, இங்கிருந்து 6.12 மணிக்கு புறப்பட்டு பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 10 மணிக்கு சென்று சேருகிறது.

    அந்த ரெயில் உடுமலை, பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்திற்கு செல்வதற்கு மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும். அதுவரை அந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்தில் நின்றிருக்கும்.

    ராமேஸ்வரம் வரை இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்த ரெயிலை ராமேஸ்வரம் வரை சென்று வரும் வகையில் இயக்குவதற்கு நேரம் உள்ளது. அவ்வாறு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்கினால் உடுமலை மட்டுமல்லாது பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயனடைவார்கள்.

    அதனால் உடுமலை வழியாக இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக சென்னை- செங்கோட்டை, மதுரை-செங்கோட்டை, செங்கோட்ட- மயிலாடுதுறை, வேளாங்கண்ண-எர்ணாகுளம், சென்னை- கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக தினசரி 6 ெரயில்கள் செல்கிறது. பொதுமக்கள் ஆட்டோ மூலம் ெரயில் நிலையத்திற்கு செல்கின்றனர். வெளியூர் பயணிகள் நீதிமன்றம் சென்று அங்கிருந்து ெரயில் நிலையத்திற்கு நடந்து செல்கின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி, திருத்தங்கல், கிருஷ்ணப்பேரி, அச்சங்கு ளம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை தேரடி, நகராட்சி அலு வலகம், தாலுகா அலுவலகம், ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் ெரயில் பயணிகள் மட்டுமின்றி தாலுகா அலுவலகம் செல்லும் மக்களும் பயனடைவர். இதனால் நகர பஸ்களை ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×