search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிப்பொழிவு"

    • மூடப்பட்ட 14 சாலைகளில், ஆறு லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலும், நான்கு குலுவிலும் உள்ளது.
    • மணாலியில் உள்ள ரோஹ்தாங் பாஸில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் அருகே சுமார் 500 வாகனங்கள் சிக்கியுள்ளன.

    இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மொத்தம் 14 சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அடல் சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலிலிருந்து தர்ச்சா (தேசிய நெடுஞ்சாலை 3), தர்ச்சா முதல் ஷிங்குலா முதல் ஜாங்க்சார் வரை, கோக்சர் முதல் லோசார் (தேசிய நெடுஞ்சாலை 5) மற்றும் தண்டியிலிருந்து காது நுல்லா வரை சாலைகள் உள்ளன.

    மூடப்பட்ட 14 சாலைகளில், ஆறு லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலும், நான்கு குலுவிலும், மற்றவை மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உள்ளதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    மணாலியில் உள்ள ரோஹ்தாங் பாஸில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் அருகே சுமார் 500 வாகனங்கள் சிக்கியுள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை இரவுக்குள் மீட்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டது.

    போலீசார் மீட்பு பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு பிரேக் போட வேண்டாம் என்றும், சறுக்குவதைத் தவிர்க்க முதல் கியரில் நத்தை வேகத்தில் செல்லுமாறும் கேட்டுக் கொண்டனர்.

    • அம்மாபேட்டை பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
    • தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. தாளவாடி மற்றும் பர்கூர் மழைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    பவானி, காவிரி ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் குளிர்ச்சியாக மாறியது. வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்யாததால் இரவில் இருந்தே குளிருடன் பனிப்பொழிவும் இருந்து வந்தது. குறிப்பாக அம்மாபேட்டை பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.

    இதனால் பவானி-மேட்டூர் செல்லும் மெயின் ரோட்டில் காலை 7 மணி வரை எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரிய வில்லை. இதனால் காலை நேரத்திலும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரிய விட்டு வந்து சென்றது.

    கடும் குளிரால் மலை பிரதேசத்தை போல் ஈரோடு மாவட்டம் மாறி விட்டது.

    ×