search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்மநாபசுவாமி கோவில்"

    • கிருஷ்ணருக்கு புடவை அணிவிக்கப்பட்டு மயக்கும் மோகினியாக அலங்கரிக்கப்படுவார்.
    • சந்தனம் அரைப்பதற்கான இயந்திரம் பழுது பார்க்க கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலில் ஏகாதசி தினத்தன்று கிருஷ்ணருக்கு மோகினி அலங்காரம் செய்யப்படும். அந்த அலங்காரத்தில் கிருஷ்ணருக்கு புடவை அணிவிக்கப்பட்டு மயக்கும் மோகினியாக அலங்கரிக்கப்படுவார். இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு இந்த நிகழ்வு நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சந்தன பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது.

    சந்தனம் அரைப்பதற்கான இயந்திரம் பழுது பார்க்க கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் ஏகாதசிக்கு தேவையான சந்தனம் முன்னதாகவே அரைத்து வைக்கப்பட்டது. ஆனால் அது போதுமானதாக இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிகழ்வு திடீரென நிறுத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கோவிலில் ரூ.92.22 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். #PMModi #PadmanabhaswamyTemple
    திருவனந்தபுரம்:

    கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. விஷ்ணு பகவானின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கேரளா வந்தார். அவர் கொல்லத்தில் 13 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு உள்ள புறவழிச்சாலையை திறந்து வைத்தார்.



    அதைத்தொடர்ந்து அவர் பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு மத்திய அரசின் சுவதேஷ் தரிசன் திட்டத்தின் கீழ் ரூ.92.22 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்தார். சுமார் 20 நிமிடம் அங்கே அவர் செலவிட்டார்.

    பிரதமர் மோடியுடன் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் உள்பட பலர் சென்றனர். அத்துடன் கேரள பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் டெல்லி திரும்பினார்.

    முன்னதாக கொல்லத்தில் புறவழிச்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் மாநில அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த நாடும் சபரிமலை பற்றித்தான் பேசி வருகிறது. சபரிமலை விவகாரத்தை ஆளும் இடதுசாரி முன்னணி அரசு கையாளும் முறையானது, வரலாற்றிலேயே எந்த ஒரு அரசோ, கட்சியோ செய்திராத மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும்’ என குற்றம் சாட்டினார்.

    அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை கம்யூனிஸ்டுகள் மதிக்கமாட்டார் கள் என்பது நமக்கு தெரியும். ஆனாலும் இத்தகைய வெறுப்பு செயலானது யாரும் கற்பனை செய்திட முடியாதது. இதைப்போல காங்கிரஸ் கட்சியும் சபரிமலை விவகாரத்தில் இரட்டை நிலையை கொண்டிருக்கிறது. அந்தவகையில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்’ எனவும் குறிப்பிட்டார்.

    பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மோடி கண்டனம் தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது என கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

    இதைப்போல சபரிமலை விவகாரத்தை அரசியல் வாய்ப்பாக பா.ஜனதா பயன்படுத்துவதையே பிரதமரின் பேச்சு எடுத்துரைப்பதாக காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது.
    பிரசித்திப்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ள பொக்கி‌ஷங்களை கேரள வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்துவது குறித்து திருவிதாங்கூர் மன்னர் கருத்து தெரிவித்துள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் ஏராளமான ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த அறைகளை திறந்து பார்த்தபோது தங்கம், வைரம் என்று விலை மதிக்க முடியாத பொக்கி‌ஷம் அந்த அறைகளில் நிறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொக்கி‌ஷங்களை கணக்கெடுத்து பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, அந்த பொக்கி‌ஷங்கள் இருந்த 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவை கணக்கெடுக்கப்பட்டது. மேலும் சில அறைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு இன்னும் அனுமதி வழங்காததால் அவை திறக்கப்படவில்லை.

    அந்த அறைகளிலும் ஏராளமான பொக்கி‌ஷம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பத்மநாபசுவாமி கோவிலுக்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த பொக்கி‌ஷம் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.


    கேரளாவில் தற்போது வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து கேரளம் மீண்டு வர அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் தேவைப்படும் என்று மாநில அரசு கூறி உள்ளது. பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கி‌ஷங்களை கேரள வெள்ளப்பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்ற கருத்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுபற்றி பத்மநாபசுவாமி கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் மன்னர் ஆதித்தயவர்மா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பொக்கி‌ஷங்களின் மொத்த மதிப்பு பற்றி எனக்கு தெரியாது. அவசர கால தேவைக்காக எனது முன்னோர் இவற்றை சேகரித்து வைத்துள்ளனர்.

    கேரள இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த பொக்கி‌ஷங்களை நிவாரண பணிக்களுக்கு பயன்படுத்துவது பற்றி நான், எதுவும் கூற முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தான் எதையும் செய்ய முடியும்.

    கேரள மாநில அரசும் இதில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். பத்மநாபசுவாமி கோவில் மட்டுமல்ல அனைத்து மத வழிபாட்டு தலங்களில் இருந்தும் உதவிகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods #PadmanabhaswamyTemple
    ×