search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் மோசடி"

    • உலக நாதன் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
    • உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு பூபாலன் நகரை சேர்ந்தவர் உலக நாதன் (வயது 49). மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

    தற்போது புதுவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உலகநாதன் பிட்காயினில் முதலீடு செய்ய விரும்பினார். அதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய தள செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் இருந்த செல்போன் எண்ணில் உலக நாதன் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ஆன்லைன் வர்த்தக மேலாளர் மனோஜ் என்றும், பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும், இதில் முதலீடு செய்த பலர் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டார்.

    இதனை உண்மை என்று நம்பிய, உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார். அடுத்த சில நாட்களில் அந்த செயலியின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உலகநாதன், மனோஜை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த உலகநாதன், இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர் குறித்து விசாரித்து வருகிறார்.

    • டாக்டர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 12 பேரிடம் ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை பெற்று கொடுத்தேன்.
    • தொழில் அதிபர்கள் உள்பட 12 பேரிடம் ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை பெற்று இக்னீசியஸ் பிரபுவிடம் கொடுத்தேன்.

    குனியமுத்தூர்:

    மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் சலீம் ராஜா (வயது 61). வக்கீல்.

    இவர் கோவை குனியமுத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 2021-ம் ஆண்டு இணையதளம் மூலமாக கோவை புதூரை சேர்ந்த இக்னீசியஸ் பிரபு (40) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னிடம் மத்திய அரசில் தனது தெரிந்தவர்கள் உள்ளதாக கூறினார்.

    மேலும் டாக்டர்கள், தொழில் அதிபர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ஜன் சேவா புரஸ்கர விருது ஜனாதிபதி, மற்றும் பிரதமரிடம் பெற்று தருவதாக கூறினார். அதற்கு பணம் மட்டும் செலவாகும் என கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் டாக்டர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 12 பேரிடம் ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை பெற்று இக்னீசியஸ் பிரபுவிடம் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அவர் கூறியபடி விருது பெற்று கொடுக்கவில்லை.

    என்னிடம் பணம் கொடுத்தவர்கள் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எனவே என்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்த இக்னீசியஸ் பிரபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருந்து விருது வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்த இக்னீசியஸ் பிரபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

    • மர்மநபர்கள் எனது கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி பண மோசடி செய்தது தெரியவந்தது
    • சிவா மற்றும் சரவணன் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    நாகர்கோவில் :

    வில்லுக்குறி அருகே சரல்விளை பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி ஜெயக்குமாரி (வயது 43). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும் (ஜெயக்குமாரி) எனது உறவினரான வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சிவா (26) என்பவரை அழைத்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனியார் நிதி நிறுவன கடன் அட்டை(இ.எம்.ஐ.கார்டு) மூலம் ஒரு செல்போன் வாங்கினேன். பின்னர் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து நீங்கள் ரூ.22 ஆயிரத்துக்கு ஒரு ஜவுளிக்கடையில் துணி எடுத்ததாகவும், அதற்கான கட்டணத்தை கடந்த 2 மாதங்களாக செலுத்தவில்லை என தெரிவித்தனர். ஆனால் நானோ கடன் அட்டை மூலம் துணிக்கடையில் எந்த ஒரு துணியும் எடுக்கவில்லை. மர்மநபர்கள் எனது கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி பண மோசடி செய்தது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் அட்டை மூலம் பண மோசடி செய்தவர்கள் பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடன் அட்டை மூலம் பெண்ணிடம் மோசடி செய்தது அவரது உறவினர் சிவா மற்றும் அவரது நண்பர் புத்தேரியைச் சேர்ந்த சரவணன்(26) என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சிவா மற்றும் சரவணன் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    ×