search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசு பாதுகாப்பு"

    • இமாச்சல பிரதேச பட்ஜெட்டில் பசு பாதுகாப்புக்கு என புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
    • இமாச்சல பிரதேசத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் ரூ.10 கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    பட்ஜெட்டில் பசு பாதுகாப்புக்கு என புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் பசு பாதுகாப்புக்கு ரூ.100 கோடி செலவிடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த பணத்தை மது விற்பனை மூலம் திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

    அதன்படி இமாச்சல பிரதேசத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் ரூ.10 கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ரூ.100 கோடி வரை வசூலாகும் என மாநில அரசு கூறியுள்ளது.

    பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து, பூச்சிக்கொல்லிகள் முதல் மருந்துகள் வரை பல முக்கியமான பொருட்களை தயாரிக்கலாம் என சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிரணி மாநாடு நடைபெற்றது. இதில், முதல்வர் சிவராஜ் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பசுக்கள், மாடுகள் இல்லாமல் பல வேலைகள் நடக்காது. எனவே, அவை மிகவும் முக்கியமானவை. முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம், சிறுநீர் ஆகியவை, மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும்.

    இந்த துறையில் பெண்களின் பங்களிப்புடன் நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து, பூச்சிக்கொல்லிகள் முதல் மருந்துகள் வரை பல முக்கியமான பொருட்களை தயாரிக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில், பசுக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பசுக்களைப் பாதுகாப்பதற்கும், பசு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் ஆறு துறைகளின் அமைச்சர்களைக் கொண்ட  பசு அமைச்சரவை உருவாக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

    ×