என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பசுக்களால் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் -சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
Byமாலை மலர்13 Nov 2021 5:08 PM GMT (Updated: 13 Nov 2021 5:08 PM GMT)
பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து, பூச்சிக்கொல்லிகள் முதல் மருந்துகள் வரை பல முக்கியமான பொருட்களை தயாரிக்கலாம் என சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிரணி மாநாடு நடைபெற்றது. இதில், முதல்வர் சிவராஜ் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-
பசுக்கள், மாடுகள் இல்லாமல் பல வேலைகள் நடக்காது. எனவே, அவை மிகவும் முக்கியமானவை. முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம், சிறுநீர் ஆகியவை, மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும்.
இந்த துறையில் பெண்களின் பங்களிப்புடன் நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து, பூச்சிக்கொல்லிகள் முதல் மருந்துகள் வரை பல முக்கியமான பொருட்களை தயாரிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில், பசுக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பசுக்களைப் பாதுகாப்பதற்கும், பசு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் ஆறு துறைகளின் அமைச்சர்களைக் கொண்ட பசு அமைச்சரவை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... டெல்லியை மிரட்டும் காற்று மாசு- பள்ளிகளை மூட அரசு உத்தரவு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X