search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் பரவசம்"

    • திருவதிகையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது.
    • இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி முதல்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலை போல் கிரிவலத்தால் புகழ் பெற்று வரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி முதல்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் சாமி, அம்மனுக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள், தீபாராதனை மற்றும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாட வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது தொடர்ந்து ஸ்தல நாயகர் திரிபுர சம்ஹாரமூர்த்தி மற்றும் திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 7.45 மணி அளவில் ராஜ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்தனர். அப்போது கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் திரிபுரசம்ஹாரமூர்த்தியும், திரிபுரசுந்தரியும் எழுந்தரு ளினர்.

    பின்னர் தேரில் சிவாச் சாரியார்கள் வேதமந்தி ரங்கள் ஓத, மகாதீபாராத னை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திர ளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது பக்தர்கள், ஹரகர மகாதேவா, ஓம் நமச்சிவாயம், சிவாய நம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர்.இந்த தேரோட்டத்தில் கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், நகரசபை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கள் எம்.சி. சம்பத், எம்.சி.தாமோதரன், வக்சீல் எம்.சி.தண்டபாணி, உதவி ஆணையாளர் சந்திரன், தாசில்தார் ஆனந்தி, நகராட்சி ஆணையாளர்மகேஷ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, செயல் அலுவலர் மகாதேவி, ராமலிங்கம், வேல்விழி, ரமேஷ்பாபு, ஆய்வாளர்கள் ஸ்ரீதேவி, ஜெயசித்ரா,துணை தாசில் தார் சிவக்குமார், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் ஆகியோர்வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 8.45 மணிக்கு கோவில் முன்பு இருந்து தொடங்கிய தேரோட்டம், மாடவீதியில் வலம் வந்து மீண்டும் 9.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று இரவு 7 மணியளவில் சரநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள செய்து,திரிபுர சம்ஹார மூர்த்தி திருத்தேரில் ஐதீக முறைப்படி முப்புரம் எரித்த காட்சி நடைபெற உள்ளது.

    • இந்துக்களின் புனித தலமான காசியில் கங்கை நதிக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று ஏற்காட்டில் உற்பத்தியாகி சேஇந்துக்களின் புனித தலமான காசியில் கங்கை நதிக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
    • அதே போன்று ஏற்காட்டில் உற்பத்தியாகி சேலம் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு நதியின் புனிதம் காக்கும் வகையில் மகா ஆரத்தி வழிபாடு நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர்.

    சேலம்:

    இந்துக்களின் புனித தலமான காசியில் கங்கை நதிக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று ஏற்காட்டில் உற்பத்தியாகி சேலம் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு நதியின் புனிதம் காக்கும் வகையில் மகா ஆரத்தி வழிபாடு நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். சேலம் தெய்வீக தமிழ் சங்கம் அறக்கட்டளை, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் ஆன்மீக, இலக்கிய, சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    இதற்காக நேற்று காலையில் சேலத்தில் திரண்ட அனைவரும் நதி உற்பத்தியாகும் ஏற்காடு வசம்பாடி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று ஆரத்தி வழிபாடு நடத்தினர்.

    பின்பு திருமணிமுத்தாறு கரையில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட 5 தலங்களான சேலம் சுகவனேஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோவில், நன்செய் இடையேறு திருவேலிநாதர் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    மாலையில் சேலம் பஞ்சாட்சர கணபதி கோவில் அருகே திருமணிமுத்தாறு கரையில் அனைவரும் திரண்டனர். அங்கு அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமையில் ஏராளமான துறவிகள் நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். சிவ மந்திரங்கள், பஜனையுடன் இந்த வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் நதியை வணங்கினார்கள். காசியில் நடப்பது போன்று இந்த ஆரத்தி நிகழ்வு நடந்ததால் அதை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக அமைப்பினர் பேசுகையில், புண்ணிய நதியான திருமணிமுத்தாற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதுபோன்ற ஆரத்தி நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் நதிகள் பிரவாகம் எடுத்து ஓடுவதோடு விவசாயமும் செழிக்கும் என்பதால் மாதந்தோறும் ஆரத்தி விழா நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.
    • 8 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கு அணையாமல் எரிந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பரவியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் பகல் 12 மணி முதல் அம்மனின் கீழ் வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கின் சுடர் அணைந்து பின்னர் பிரகாசமாக எரிந்தது.

    காற்றில் இது போன்று நடந்திருக்கும் என நினைத்த கோவில் பூசாரி, தொடர்ந்து இதே போன்று அணைந்து பின் மீண்டும் பிரகாசமாக எரிவதை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

    அம்மன் கோவிலில் 8 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கு அணையாமல் எரிந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இந்த அதிசயத்தை பார்த்து அம்மனை பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.

    மேலும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கினர். இது குறித்து கோவில் பூசாரி பொன்னுசாமி கூறுகையில், காலையில் ஒரு முறை மட்டுமே எண்ணெய் ஊற்றினோம்.

    ஆனால் தொடர்ந்து இதே போன்று விளக்கு அணைந்து பின்னர் சுடர்விட்டு எரிகிறது. இதை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர் என்றார்.

    ×