search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூற்பாலைகள்"

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின்படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.

    நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவித்து வருகின்றனர்.

    அதன்படி நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திற்கான மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல்களில் எந்தவித ஏற்றமும் இறக்கமும் இன்றி கடந்த மாத(ஜனவரி) நூல் விலையே தொடரும் என அறிவித்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன.
    • சென்னை தலைமை செயலகத்தில் நாளை நூற்பாலை அதிபர்களுடனான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் மூலப்பொருட்களின் விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, வங்கி கடன் வட்டி உயர்வு, துணிகள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து கடந்த 15-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைந்து உள்ளன. இங்கு 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதிலும் உள்ள நூற்பாலைகளில் தினந்தோறும் லட்சக்கணக்கில் நூல்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.400 கோடிக்கும் மேல் அன்னிய செலாவணி கிடைத்து வந்தது.

    இந்த நிலையில் நூற்பாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக அங்கு வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளிகளின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூற்பாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் நாளை நூற்பாலை அதிபர்களுடனான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்காக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம், ஓபன் என்ட் நூற்பாலைகள் சங்கம், மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பு, இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு, தென்னிந்திய மில்கள் சங்கம், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழில் முடக்கம் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளோம். எனவே வேறுவழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ள தமிழக அரசுக்கு நன்றி.

    தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் எங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எனவே தமிழகம் முழுவதும் 6-வது நாளாக தொடரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு, பஞ்சாலை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் பஞ்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன.

    கோவை:

    தமிழகத்தில் சிறு-குறு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நூல் பொருட்கள் தயார் செய்யப்பட்டு ஆடை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நூற்பாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலையை மத்திய அரசு அதிகரித்தது. இன்னொருபுறம் மாநில அரசு மின்கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதனால் பஞ்சு மில்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறின.

    இந்த நிலையில் தமிழகத்தில் பஞ்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், துணிகள் ஏற்றுமதிக்கான வரியை குறைக்க வேண்டும், வெளிநாட்டில் இருந்து ஆடைகள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும், வங்கிகளில் கடன்வட்டி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பஞ்சாலைகள் கடந்த வாரம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.

    எனவே அவர்களுடன் மத்திய-மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு எட்டப்பட வில்லை.

    இதனை தொடர்ந்து கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறு, குறு நூற்பாலைகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கின. அவர்களின் போராட்டம் தற்போது 3-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு தினமும் சுமார் 35 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் தமிழக பஞ்சாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, அங்கு வேலை பார்த்த 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு உள்ளது. இன்னொருபுறம் பஞ்சாலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்த சுமார் 10 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் பஞ்சாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, கடந்த 3 நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் டன் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு ரூ.350 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாலை நிறுவனங்களுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு 1.05 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டது.
    • பருத்தி சீசன் முடியும் நிலையில் வரத்து அதிகமாக இருக்கிறது.

    திருப்பூர்:

    கடந்த பருத்தி ஆண்டில் (2021 அக்டோபர் - 2022 செப்டம்பர்), செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வரலாறு காணாத அளவுக்கு பஞ்சு விலை உயர்த்தப்பட்டது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு 1.05 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டது.பருத்தி சீசன் துவங்கிய பின்7 மாதங்களாக 70 ஆயிரம் முதல் 62 ஆயிரம் ரூபாய் வரை விலை நீடித்தது. நாளுக்கு நாள் ஜவுளி உற்பத்தி குறைவதால், நூலுக்கான தேவையும் குறைந்தது.பஞ்சுக்கு கிராக்கி இல்லாததால் தற்போதைய நிலவரப்படி ஒரு கேண்டி பஞ்சு 58 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.

    காத்திருந்த விவசாயிகள் ஜனவரி மாதத்துக்கு பின் மார்க்கெட் வர துவங்கினர். சீசன் நிறைவடைய உள்ள நிலையில் தினமும் 1.05 லட்சம் பேல் வரை விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி குறைந்ததால் நூற்பாலைகள் நூல் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வரத்து அதிகமாக இருப்பதால் பஞ்சு விலை மேலும் சரிய துவங்கியுள்ளது. இருப்பினும்,நூல் ஆர்டர் இல்லாத நேரத்தில் பஞ்சு விலை குறைந்தும் பயனில்லையென நூற்பாலைகள் கவலை அடைந்துள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர்கள் (டாஸ்மா) சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    பருத்தி சீசன் முடியும் நிலையில் வரத்து அதிகமாக இருக்கிறது. ஒரு கேண்டி 58 ஆயிரம் ரூபாயாக விலை குறைந்துள்ளது. ஆர்டர் இல்லாததால் நூற்பாலைகள் 50 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்துள்ளன. பஞ்சு விலை குறைந்தும் பிரயோஜனம் இல்லை.பஞ்சு வாங்கி இருப்பு வைக்கவோ,நூல் உற்பத்தி செய்து இருப்பு வைக்கவோ, நூற்பாலைகள் பொருளாதார ரீதியாக தயாரில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

    ×