search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன முறை"

    • அப்போது ஆட்டோவில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
    • இருவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம் போலீஸ் சப் -இன்ஸ்பெ க்டர் தனபால் தலை மையில் ஏட்டு நெப்போலியன், தனிப்பிரிவு சிவஞானம் ஆகியோர் இன்று காலை பச்சையாங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோவில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை முழுமையாக சோதனை செய்தனர் அப்போது ஆட்டோவின் பின்புறம் தகடு இருந்தது.

    அதனை அகற்றி பார்த்த பெட்டி போல் அமைக்கப்பட்டு அதில் சாராய பாக்கெட் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் புதுவண்டிப்பாளையம் சேர்ந்த பாவாடைராயன் (36) , சரத்குமார் (31) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு சாராயத்தை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். ஷேர் ஆட்டோவிற்குள் சிறிய பெட்டி போல் செய்து அதன் மேல் தகடு அமைத்து நூதன முறையில் சாராயம் கடத்தி சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கொள்ளை கும்பல் இரும்பு பொருட்கள் கடத்த முடி யாமல் தவித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் யாறேனும் அவ் வழியாக வந்தால் அவர்களை மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியப் பட்டு பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனி உள்ளது. இங்கு இருந்து பல்லாயிரம் டன் இரும்பு பொருட்களை ஏராளமானோர் தினந் தோறும் திருடிக் கொண்டு லாரி டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிளில் திருடி சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் தனியார் கம்பெனியிலிருந்து பல்லாயிரம் டன் கணக்கில் இரும்பு பொருட்கள் திருடி சென்றதாக போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமானவரை கைது செய்து வருகின்றனர். போலீசார் இரும்பு பொருட்கள் திருடும் கும்ப லை தீவிரமாக கண்கா ணித்து பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருவதால் கொள்ளை கும்பல் இரும்பு பொருட்கள் கடத்த முடி யாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடற்கரை வழியாக திருடப்பட்ட இரும்பு பொருட்களை வாகனங்கள் மூலமாக மர்ம கும்பல் கடத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தனியார் கம்பெனியில் இருந்து பெரிய அளவிலான இரும்பு பொருட்களை சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து வாகனங்கள் மூலமாக புது சத்திரம் பகுதி அய்யம் பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கடற்கரை ஓரமாக கொண்டு வரப்பட்டு கியாஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் மிஷின் ஆகிய வற்றை கொண்டு வந்து நள்ளிரவு முதல் அதிகா லை வரை இரும்பு பொருட்களை தங்களுக்கு தேவையான அளவில் பிரித்து எடுத்து 10 -க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் கடற்கரை ஓரமாகவே இரும்பு பொருட்களை கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறேனும் அவ் வழியாக வந்தால் அவர்களை மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் பல்வேறு கெடுபிடி விதித்தாலும் மர்ம கும்பல் நூதன முறையில் கடற்கரை ஓரமாக திருடப்பட்ட இரும்பு பொருட்களை கடத்தும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேக்கை வெட்டி சாப்பிட வைத்து நூதன முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.
    • புதிய சிந்தனையில் உருவாக்கும் நோக்கில் இதுபோன்று செய்ததாக தெரிகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை எல்.டி பேங்க் தெருவை சேர்ந்தவர் சபீர், இவரது சகோதரர் ஷாகீர் (17).இவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 30-ந் தேதி ஷாகீர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அண்ணன் சபீர் இந்தியன் (டாய்லெட்) கழிவறை வடிவத்தில் 5 கிலோ கேக் ஆர்டர் செய்து அதை அவரது தம்பி பிறந்தநாள் அன்று அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் கேக்கை வெட்டி சாப்பிட வைத்து நூதன முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.

    இந்தியன் டாய்லெட் முறையில் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சற்று அருவருப்பாக இருந்தாலும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் புதிய சிந்தனையில் உருவாக்கும் நோக்கில் இதுபோன்று செய்ததாக தெரிகிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஒரு வாலிபர் மளிகை பொருட்கள் வாங்குவது போல் நடித்து எனக்கு தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டான்.
    • முருகன் வீட்டில் சென்று தண்ணீரை கொண்டு வருவதற்குள் அந்த வாலிபர் கடையில் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்றான்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்உள்ள சுந்தர மேடுபகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் வீட்டின் முன்புறம் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த ஒரு வாலிபர் மளிகை பொருட்கள் வாங்குவது போல் நடித்து எனக்கு தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டான். உடனே முருகன் வீட்டில் சென்று தண்ணீரை கொண்டு வருவதற்குள் அந்த வாலிபர் கடையில் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்றான். இதை பார்த்த முருகன் திருடன் திருடன் கூச்சலிட்டார்.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவனைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இது குறித்து கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    விசாரணையில் அவர் ஒடுவன் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைசேர்ந்த பாவாடை (வயது 32) என்பதும் இவர் மீது விழு ப்புரம் மேற்கு போலீஸ் நிலையம் மற்றும் காணை போலீஸ் நிலை யத்திலும் பல்வேறு திருட்டு வழக்கு கள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பகல் நேரத்தில் மளிகை கடையில் நூதனமான முறையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது அந்த பகு தியில் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

    ×