search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறம்"

    • ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை.
    • பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது.

    ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கு ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தனித்துவ குணம் கொண்ட சில ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு..

    பீச் வண்ண ரோஸ்:

    மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களின் கலவையை பிரதிபலிக்கும் பீச் வண்ண ரோஜாக்கள் நன்றியுணர்வை குறிக்கின்றன. அடக்கம், அனுதாபம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    மஞ்சள்:

    மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான அன்பையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்த இவை சிறந்த தேர்வாக அமைகின்றன.

    ஆரஞ்சு:

    ஆரஞ்சு நிற ரோஜாக்கள் உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சியை குறிக்கின்றன. ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அவை பகிரப்படுகின்றன.

    வெள்ளை:

    வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய தொடக்கங்களை குறிக்கின்றன. தம்பதியினரிடையே நிலவும் தூய அன்பை குறிக்க திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    இளஞ்சிவப்பு:

    இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றன. வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றன. அதே சமயம் அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிப்பிடுகின்றன.

    நீலம்:

    நீல நிற ரோஜாக்கள் மர்மம், சாத்தியமில்லாதது போன்ற உணர்வை குறிக்கின்றன.

    சிவப்பு:

    இது காதலின் அடையாள சின்னமாக விளங்குகிறது. இரு மனங்களுக்கு இடையே புதைந்திருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், காதல், அன்பு, ஆசையின் வெளிப்பாட்டை பகிரவும் உதவும் தூதுவனாக பயன்படுகிறது, சிவப்பு ரோஜா.

    • மீனவர் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
    • கழிவுகளை கடலில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து மீனவர்கள் கூறிய தாவது:-

    மணவாளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலின் நிறம் மாறி காணப்பட்டது. இதற்கு ஐ.ஆர்.இ. மணல் ஆலையிலிருந்து வெளி யேற்றப்பட்ட கழிவு தண்ணீர்தான் காரண மாகும். இதனால் மீன் இனம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே ஐ.ஆர்.இ. மணல் ஆலையிலிருந்து வெளி யேற்றப்படும் கழிவுகளை கடலில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மீனவர்கள் பயன்படுத்தும் விசை படகை புதுப்பிக்கும் காலம் ஏற்கனவே 3 ஆண்டுகள் என இருந்ததை ஒரு ஆண்டுகள் என மாற்றி உள்ளனர்.

    இதனால் மீனவர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. விசைப்படகு புதுப்பிக்கும் காலத்தை மீண்டும் 3 ஆண்டுகள் என மாற்றி அமைக்க வேண்டும். சாவாளை மீன்களை பிடிக்க தடை விதிக்க வேண்டும். இழுவை வலை இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும்.

    மீனவர்கள் நல வாரி யத்தில் பதிவு செய்த வர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும்.கடியப்பட்டினத்தில் குடிநீர் பிரச்சி னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி னார்கள்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மணவாளக்குறிச்சி பகுதியில் கடலில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த தண்ணீரை ஆய்வு க்காக தற்போது அனுப்பி உள்ளோம்.

    ஏற்கனவே ஐ. ஆர். இ. மணல் ஆலையிலிருந்து கடலில் விடும் தண்ணீரால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட த்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவப்பு மண்ணை சுத்தம் செய்யும் போது வெளி வந்த தண்ணீரின் காரணமாகத்தான் கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று ஆய்வு பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

    ×