search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு நலப்பணி திட்ட முகாம்"

    • நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
    • இதில் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.

    இதற்கு தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். உதவி திட்ட அலுவலர் வீரமுத்து வரவேற்புரை ஆற்றினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார். திட்ட அலுவலர் மெட்டில்டா சாந்தி மாணவர்களுக்கு நாட்டு நலப் பணித்திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் ஆசிரியர்கள் ஸ்ரீதர் ராஜா, முருகேசன், கிரி அரசன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆரம்பப் பள்ளி ஆசிரியை அனுராதா நன்றி கூறினார்.

    • நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தடங்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரு நாள் முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடு களையும் திட்ட அலு வலர்கள் பேரா சிரியர்கள் பழனிசாமி, கலை, மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தடங்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரு நாள் முகாம் நடைபெற்றது.

    கல்லூரிச் செயலாளர் ராபட் ரமேஷ் பாபு, கல்லூரி முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகள், செடி கொடிகள், நெகிழிகள் போன்றவற்றை அகற்றி, அப்பள்ளி மாணவ, மாணவியர்களிடையே தூய்மைக் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் வழங்க ப்பட்டன.

    இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடு களையும் திட்ட அலு வலர்கள் பேரா சிரியர்கள் பழனிசாமி, கலை, மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அறவாழி செய்திருந்தார்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 10-வது வார்டு புளியநகர் பகுதியில் நாசரேத் பிள்ளையன் மனை மர்காஷியஸ் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர். சுத்தம் செய்த இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    சாயர்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஞானராஜ் வரவேற்று பேசினார். நாசரேத் பிள்ளையன்மனை மர்காஷியஸ் நாட்டு நலபணி திட்ட அணிகள் எண் 59,63,131, ஆசிரியர்கள் சாந்தி சலோமி, சீயோன் செல்ல ரூத், பியூலா.ஹேமலதா, சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் மற்றும் கல்லூரி மாணவிகள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அறவாழி ஏற்பாடு செய்திருந்தார். தூய்மை பணி செய்த மாணவிகளை புளிய நகர் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்.

    • மாணவர்கள் விடுதி, தெருக்கள் உள்ளிட்ட வைகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்த முகாமில் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவாட்டம் போச்சம்பள்ளி அருகேயு ள்ள நாகரசம்பட்டியில் இயங்கி வரும் பெரியார் ராமசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.

    இந்த முகாமில் மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டத்தில் உள்ள 25 -க்கும் மேற்ப்ப ட்ட மாணவர்கள் பொது சேவையில் ஈடுபட்டு பள்ளி வளாகம் மற்றும் மாணவர்கள் விடுதி, தெருக்கள் உள்ளிட்ட வைகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் முன்னதாக பள்ளியில் அறிமுக விழா நடைபெற்றது. இதில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் கால்நடை மருத்துவர் மணிமேகலை கலந்து கொண்டு 100-க்கும் மேற்ப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தினார்.

    தொடர்ந்து கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பு செய்வது மற்றும் தற்போதைய சிதோசன நிலைக்கு கால்நடைகளை எவ்வாறு காப்பது என்று பொதுமக்களிடையே தெளிவாக எடுத்துரைத்தார்.

    இந்த முகாமில் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பெரமன் முன்னிலை வகித்து முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து மாணவர்களை வழிநடத்தினார்.

    உதவி திட்ட அலுவலர் சங்கர் வரவேற்றார், இதில் பேரூராட்சி கவுன்சிலர் ரமேஷ், பட்டதாரி ஆசிரியர்கள் மூர்த்தி, எல்லம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மாணவர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ×