என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவக்கிரக தோஷம்"
- ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர்.
- சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர்.
புத்தி, பலம், புகழ், உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை, நோயற்ற வாழ்வும், சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவார். நவக்கிரஹங்களும் ஆஞ்சநேயரின் வாலில் ஆவாஹனம் ஆகி உள்ளார்.
நவகிரஹ தோசங்கள பில்லி சூன்யங்கள் செய்வினை கோளாறுகள் ஆகிய தோஷங்களையும் தீர்ப்பவர். குழந்தை பேறு இல்லாமை தீராத வியாதி திருமணத்தடை மேலதிகாரிகள் தொல்லை குடும்ப வாழ்க்கை பதவி உயர்வு மற்றும் ஏவல் பேய் பிடித்தவர்களுக்கு நிவர்த்தியும் உண்டாகும்.
ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பழம், தேங்காய், தயிர்சாதம், வெண்ணெய், உளுந்துவடை நிவேத்தியம் செய்யலாம். பசுநெய் தீபம் ஏற்றலாம். துளசிமாலை ஸ்ரீ ராம நாம வடைமாலை பழ மாலைகள் பவள மல்லி மாலைகள், வெற்றிலை மாலை சாத்துபடி செய்யலாம்.
யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர். ஆயிரம் யோசனை தூரம் கடலைத் தாண்டியவர் அஞ்சனாகுமாரர். சிரசை வாயில் புகுந்து வெளியே வந்தவர். மைநாக மலையினால் கௌரவிக்கப்பட்டவர். சமுத்திராஜனால் ஆதரிக்கப்பட்டவர்.
நிழல் இழுக்கும் சிம்ஹீயைக் கொன்றவர் கையினால் அடித்தே லங்கினியை வீழ்த்தியவர். அசோகவனத்தை அழித்தவர். ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர். வாலில் வைத்த தீயினால் இலங்கையை அழித்தவர். லஷ்மணரை காப்பாற்ற நிமிடத்தில் சஞ்சீவி மலையை கொண்டு வந்த மகாத்மாவான ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை சேவிப்போம். நமது இடர்களை களைந்து சகல மேன்மைகளையும் பெறுலாம்.
- எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம்.
- புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்ச்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.
இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.
கருடபுராணம், விஷ்ணு புராணம் போன் புராணங்களிள், "ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,. பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.
இப்படி முன்னோர்களின் ஆத்மாவையும் சமீபத்தில் இறந்தவர்களின் ஆத்மாவையும் பூஜை மூலமாக திருப்திப்படுத்தினால் திருமணத்தடை விலகும், புத்திரபாக்கியம் கிடைக்கும். கடன்தொல்லை, மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் போன்ற அனைத்து துன்பங்களும் விலகும்" என்கிறது புராணங்கள்.
படையல்
நம் முன்னோர்களுக்கு பிடித்த உணவை சமைத்து அவர்களுக்கு படைக்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்