search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்பர் படுகாயம்"

    மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நண்பர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் பெரியகாருகுடி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் கார்த்தி (வயது 22). அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சக்திவேல்(25), இவர்களது நண்பர் மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மிதுன்.

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மாலை திருக்குவளையில் இருந்து பெரிய காருகுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அப்போது கொளப்பாட்டில் இருந்து எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள், லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. இதில் கார்த்தி, சக்திவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மிதுன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த மிதுன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள இடையன் சாவடி களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் மோகன் (வயது 17). இவர் புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று இரவு மோகன் தனது நண்பர் சதீஷ்குமார் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆரோவில்லில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்றார். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டி சென்றார். பின்னால் சதீஷ்குமார் இருந்தார்.

    ஆரோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலைஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சதீஷ் குமார் படுகாயம் அடைந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்ஜோசப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
    ×