search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்நுட்ப பூங்கா"

    • மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
    • ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பார்க் உருவானதில் இருந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி அபரி மிதமானது.

    பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டது.

    மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இப்போது சென்னையின் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம் வண்ட லூர் பகுதியிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

    டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கி உள்ளது.

    இதற்கான நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

    இதில் மலையம்பாக்கம் பகுதியில் அமையும் தொழில்நுட்ப பூங்காவுக்கு 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2-வது ஐ.டி. பூங்கா மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு ஏக்கருக்கு ரூ.5 கோடி என நிலமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    3-வது தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு நில மதிப்பு ஏக்கருக்கு ரூ.8.05 கோடி மதிப்பாக உள்ளது.

    இந்த 3 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை 1½ வருடத்தில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இதன்மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சி அடைய இது உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., ஆய்வு
    • படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்

    வேலூர்:

    வேலூர் அப்துல்லா புரத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்ப பூங்கா கட்டப்படுகிறது.

    இந்த பணிகளை ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சட்டமன்றத்தில் அணைக்கட்டு தொகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என பல பலமுறை நான் பேசி உள்ளேன். அதன் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதன் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

    அதன்பின்பு 2-வது பகுதி கட்டதற்கான கட்டுமான பணிக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்வார் என எதிர்பார்க்கிறோம். இந்த டைட்டில் பார்க்கில் அணைக்கட்டு தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதை தொடர்ந்து நரசிங்கபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    • முதல்-அமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வமாக உள்ளார்.
    • பொருளாதார மண்டல வளாகத்தில் கையுறை தயாரிக்கும் நிறுவனம் திறக்கப்பட உள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2,100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது.

    கிடப்பில் போடப்பட்ட திட்டம்

    இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தொழில் நுட்ப பூங்கா திட்டம் அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கிடப்பில் போடப்பட்டது.

    பின்னர் கடந்த 2006-ம் ஆண்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை விரிவுபடுத்தும் பொறுப்பு ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஆனால் அந்த நிறுவனம் தொழில் நுட்ப பூங்கா திட்டத்தை செயல்படுத்தாமல் இந்த நிலத்தை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

    தற்போது 9 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தொழிற் சாலைகள் தொடங்கப்படாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    சபாநாயகர் ஆய்வு

    இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று நாங்குநேரி தொழில் நுட்ப பூங்காவை பார்வையிட்டார். இங்கு செயல்பட்டு வரும் தொழி ற்சாலைகளில் ஆய்வு மேற்கொ ண்டார். அதனை தொடர்ந்து தொழிற்சாலைகளின் உரிமை யாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.

    இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    முதல்-அமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். எனவே நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கி உள்ளவர்கள் தைரியமாக தொழில் செய்யுங்கள். உங்களுக்கு முதல்-அமைச்சர் பாதுகாப்பாக இருப்பார். கலைஞரின் கனவு திட்டமான இந்த திட்டத்திற்கு உயிரூட்டப்படும்.

    வருகிற ஜூலைமாதம் இந்த பொருளாதார மண்டல வளாகத்தில் கையுறை தயாரிக்கும் நிறுவனம் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் பேருக்கு வேலை அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் பெல்சி, ராஜன், ஆரோக்கிய எட்வின் மற்றும் தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    ×