search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.30 கோடியில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணி
    X

    ரூ.30 கோடியில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணி

    • ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., ஆய்வு
    • படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்

    வேலூர்:

    வேலூர் அப்துல்லா புரத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்ப பூங்கா கட்டப்படுகிறது.

    இந்த பணிகளை ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சட்டமன்றத்தில் அணைக்கட்டு தொகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என பல பலமுறை நான் பேசி உள்ளேன். அதன் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதன் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

    அதன்பின்பு 2-வது பகுதி கட்டதற்கான கட்டுமான பணிக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்வார் என எதிர்பார்க்கிறோம். இந்த டைட்டில் பார்க்கில் அணைக்கட்டு தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதை தொடர்ந்து நரசிங்கபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×