என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை"
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணத்தில் உள்ள பிலால் நகரைச் சேர்ந்தவர் பசீர் என்ற சிங்கம் பசீர் (வயது 53). இவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார்.
பெரிய பட்டணத்தில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. தனது டிரைவர் மர்சூக் அலி என்பவரிடம் வீட்டின் பொறுப்பை கவனித்துக் கொள்ளுமாறு சிங்கம் பசீர் கூறிவிட்டு வெளிநாட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிங்கம் பசீர் சொந்த ஊருக்கு வந்தார். அவர் வந்த நாளில் இருந்து டிரைவர் மர்சூக் அலி மாயமானார். அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.
இந்த நிலையில் வீட்டில் இருந்த பொருட்களை சரிபார்த்தபோது, பீரோவில் இருந்த 31 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து விசாரித்ததில், மர்சூக் அலி நகையை திருடி விற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி போலீசில் சிங்கம்பசீர் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி மர்சூக் அலி மற்றும் உடந்தையாக இருந்த செய்யது அபுதாகீர், அசன் மைதீன், முகமது பயாஸ்கான், பைசல் சர்புதீன், பாசிக் அலி, சாகுல் அமீது, சுலைமான் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜி.காளியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 58).
இவர் அப்பகுதியில் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி தெய்வநாயகம்(50).
இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு கோவை வந்தனர். இரவில் வீடு திரும்பிய போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நெகமம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலசுப்பிரமணியத்தின் தொழிற்சாலையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது உறவுக்காரர் ஒருவரும் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
நேற்று மாலை வரை அங்கிருந்த அவர்கள் இரவு முதல் காணவில்லை. எனவே அவர்கள் வீட்டில் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்