என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே தொழில் அதிபர் வீட்டில் 10 பவுன் நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்29 May 2018 8:12 AM GMT (Updated: 29 May 2018 8:12 AM GMT)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தொழில் அதிபர் வீட்டின் ஜன்னலை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றன.
நெகமம்:
பொள்ளாச்சி அருகே உள்ள ஜி.காளியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 58).
இவர் அப்பகுதியில் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி தெய்வநாயகம்(50).
இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு கோவை வந்தனர். இரவில் வீடு திரும்பிய போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நெகமம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலசுப்பிரமணியத்தின் தொழிற்சாலையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது உறவுக்காரர் ஒருவரும் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
நேற்று மாலை வரை அங்கிருந்த அவர்கள் இரவு முதல் காணவில்லை. எனவே அவர்கள் வீட்டில் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
பொள்ளாச்சி அருகே உள்ள ஜி.காளியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 58).
இவர் அப்பகுதியில் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி தெய்வநாயகம்(50).
இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு கோவை வந்தனர். இரவில் வீடு திரும்பிய போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நெகமம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலசுப்பிரமணியத்தின் தொழிற்சாலையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது உறவுக்காரர் ஒருவரும் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
நேற்று மாலை வரை அங்கிருந்த அவர்கள் இரவு முதல் காணவில்லை. எனவே அவர்கள் வீட்டில் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X