search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணி வியாபாரி"

    • பூபதி மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் லாவண்யா கோபித்துக் கொண்டு கடந்த 3 மாதம் முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
    • மனமுடைந்த பூபதி விஷம் குடித்து மயங்கினார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (29). துணி வியாபாரியான இவருக்கு லாவண்யா (23) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் பூபதி மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் லாவண்யா கோபித்துக் கொண்டு கடந்த 3 மாதம் முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதையடுத்து கடந்த 1-ந் தேதி பூபதி மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.அதற்கு லாவண்யா மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பூபதி விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்ட உறவினர்கள் அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூபதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து லாவண்யா அளித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (46). துணி வியாபாரி. கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஈரோடு வந்து நேரு வீதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்ப டவில்லை. அறையை தூய்மைபடுத்தும் தொழிலா ளர்கள் நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்தனர்.

    பின்னர் ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டவுன் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சுந்தர்ராஜன் எந்த காரணத்துக்காக தற்கொலை செய்து கொ ண்டார் என தெரியவில்லை. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×