search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி குடும்பம் நடத்த வராததால் துணி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
    X

    மனைவி குடும்பம் நடத்த வராததால் துணி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

    • பூபதி மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் லாவண்யா கோபித்துக் கொண்டு கடந்த 3 மாதம் முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
    • மனமுடைந்த பூபதி விஷம் குடித்து மயங்கினார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (29). துணி வியாபாரியான இவருக்கு லாவண்யா (23) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் பூபதி மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் லாவண்யா கோபித்துக் கொண்டு கடந்த 3 மாதம் முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதையடுத்து கடந்த 1-ந் தேதி பூபதி மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.அதற்கு லாவண்யா மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பூபதி விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்ட உறவினர்கள் அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூபதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து லாவண்யா அளித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×