search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாடுதுறை"

    • அந்த கல்வெட்டுகளின் அருகிலேயே அவர்களுடைய உருவச்சிற்பங்கள் காணப்பெறுகின்றன.
    • திருவாவடுதுறை சிவாலயம் ஒரு வரலாற்றுப்பெட்டகம் என்பதில் ஐயமேதும் இல்லை.

    மிகத்தொன்மையான இத்தலத்து திருக்கோவிலைப் பராந்தக சோழன் காலத்தில் கற்றளிப் பிச்சன் என்பாருடன் பலர் இணைந்து கற்கோவிலாக எடுப்பித்தனர் என்பதை ஸ்ரீ விமான சுவரில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.

    அந்த கல்வெட்டுகளின் அருகிலேயே அவர்களுடைய உருவச்சிற்பங்கள் காணப்பெறுகின்றன. இது ஒரு அரிய காட்சியாகும்.

    கற்றளிப் பிச்சன், இளைய திருநாவுக்கரையர், அம்பலவன் திருவிசலூரான், எழுவன் சந்திராதித்தன் - அவனுடைய பணிமகள், நக்கன் வண்ணாத்தடிகள், திருநறையூர் நாட்டு சிற்றாடி எனும் ஊரினன், தாமன் அம்பலவன் என்பவர்களின் திருவுருவச் சிற்பங்களோடு பராந்தக சோழனின் சிற்பத்தையும் இங்கு நாம் காண முடிகிறது.

    நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டுச் சாசனங்கள் இவ்வாலயத்தில் இடம் பெற்றுள்ளன.

    முதற்பராந்தக சோழன் காலம் தொடங்கி சோழ நாட்டை ஆட்சிபுரிந்த பல மன்னர்களுடைய காலத்து நிகழ்வுகள் இவ்வாலயம் முழுதும் பொறிக்கப்பெற்று காட்சி நல்குகின்றன.

    அதுபோன்றே முற்காலச் சோழர்காலப் பாணியில் தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் வடிக்கப்பெற்ற கற்சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் இவ்வாலயத்து பொக்கிஷங்களாகும்.

    சோழ மண்டலத்து திரைமூர் நாட்டு சாத்தனூருக்கு உரியதாக திருவாவடுதுறை ஆலயம் திகழ்ந்தது என்பதை கல்வெட்டுகள் கூறி நிற்கின்றன.

    திருவாடுதுறை தேவர், திருவாவடுதுறை ஆழ்வார், திருவாடுதுறை மகாதேவர் என இறைவனின் பெயரும், திருக்காட்டு கோட்டமுடைய பெரிய நாச்சியார் என அம்பிகையின் பெயரும் கல்லெழுத்துகளில் குறிக்கப்பெற்றுள்ளன.

    ஆலயம் திகழும் ஊரான சாத்தனூர், அபயாஸ்ரய சதுர்வேதி மங்கலம் என்ற அழைக்கப்பெற்றிருந்திருக்கிறது.

    ராஜராஜசோழனின் தமக்கையான ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் குந்தவையார் இன்னம்பர் நாட்டு பழைய வானவன் மாதவி, சதுர்வேதி மங்கலத்து சபையோரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட நிலத்தையும், வீடு ஒன்றினையும் விலை கொடுத்து வாங்கி ஸ்வர்ணன் அரையன் சந்திரசேகரன் எனும் உத்தம சோழ அசலன் என்பானுக்கும் அவன் தலைமுறையினருக்கும் அக்கிராமத்து வைத்திய பணிக்காக அளித்தது பற்றி இவ்வாலயத்து கல்வெட்டொன்று விரிவுற எடுத்துரைக்கின்றது.

    ஒரு ஊரின் மருத்துவப் பணிக்காக ஒரு பேரரசி கொடுத்த கொடையையும் இங்கு நாம் காண்கிறோம்.

    ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களாக மட்டும் திகழாமல் கவின் கலைகளை வளர்த்த இடங்களாகவும் திகழ்ந்தமையை திருவாவடுதுறை ஆலயத்துக் கல்வெட்டுகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

    இவ்வாலயத்தை கற்கோவிலாக எடுத்த சிற்றானைச்சூர் எனும் ஊரினனான கற்றளிப் பிச்சன் இவ்வாலயத்து இசைக் கலைஞர்களின் ஜீவிதத்திற்கு நிலம் அளித்தான் என்பதை ஒரு சாசனம் கூறுகின்றது.

    வீரமாங்குடியைச் சார்ந்த தாயன்கண்டன் என்பான் சிறுபுலியூரிலும், சிற்றானைச்சூரிலும் நிலங்கள் வாங்கி இவ்வாலயத்தில் நாளும் தேவாரம் பாடும் இருவர்க்கும், தோட்டத்தில் பணிபுரியும் இரண்டு ஆட்களுக்கும், பூக்கள் பறித்து பூமாலைகள் தொடுக்கும் இரண்டு பெண்களுக்கும், கோவிலில் நிகழும் சிறப்பு வழிபாடுகளுக்கும் அளித்தான் என்பதை ஒரு சாசனம் சுட்டுகின்றது.

    ஆலய ஊழியர்களை அறவுள்ளம் கொண்டோர் காப்பாற்றிய மரபு நம் திருக்கோவில்களில் திகழ்ந்தமையை இச்சாசனங்கள் மூலம் அறிகிறோம்.

    திருவாவடுதுறை ஆலயத்தில் சோழப் பேரரசர்கள் காலத்தில் நானாவித நட்ட சாலை (பலவகையான ஆடல்கள் நிகழும் இடம்), நாடக சாலை, சதிர்சாலை என்ற மண்டபங்கள் திகழ்ந்து அங்கு பலவகையான நாட்டியங்களும், நாடகங்களும் நிகழ்ந்துள்ளன.

    கூத்துகள் நிகழ சாக்கை காணி அளிக்கப்பெற்றமையை சாசனங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

    இவ்வாலயத்தில் அறச்சாலை ஒன்று திகழ்ந்து ஆலயத்திற்கு வருவோர்க்கு அன்னமிட்டதை சோழர்கால கல்வெட்டொன்று எடுத்துக்கூறுகின்றது.

    ராஜராஜ சோழன் காலத்தும் ராஜேந்திர சோழன் காலத்தும் அனைத்து ஊர்களின் நிலங்களும் துல்லியமாக அளிக்கப்பெற்று ஆவணப்படுத்தப் பெற்றன.

    அதன் நினைவாக இவ்வாலயத்து மண்டபம் ஒன்றினுக்கு 'உலகளந்தான்' என்ற பெயர் இடப்பெற்றிருந்தது என்பதையும், நில அளவு கோல் ஒன்றுக்கு 'மாளிகைக்கோல்' என்ற பெயர் திகழ்ந்தது என்பதையும் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

    ஒவ்வொரு நாளும் மூன்றுவேளை பூசைகளின்போது ஒவ்வொரு குடம் காவிரி நீர் கொண்டுவந்து இறைவனுக்கு அபிடேகம் செய்ய வேண்டும் என்பதற்கும், உத்தராயண சங்கராந்தி அன்று (தைப்பொங்கல் நாளன்று) திருவாவடுதுறை மகாதேவரை நூற்று எட்டு குடங்களில் எடுத்து வரப்பெற்ற காவிரி நீரால் திருமஞ்சனம் செய்ய வேண்டும் என்பதற்கும் பலர் கொடைகள் நல்கியுள்ளனர்.

    கங்கை கொண்ட சோழபுரத்தில் திகழ்ந்த கைக்கோளப்படை சார்ந்தவர்களின் குடும்பங்களுக்கு வீரபோகமாக (போரில் வென்றமைக்கு நிரந்தர ஊதியமாக) குலோத்துங்க சோழநல்லூர் என்ற கிராமத்தையே அளித்த வரலாறு ஒரு கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.

    திருவாவடுதுறை சிவாலயம் ஒரு வரலாற்றுப்பெட்டகம் என்பதில் ஐயமேதும் இல்லை.

    • திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை.
    • அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார்.

    திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு.5000) என்ற போதும், திருமந்திரத்தின் காலம் தற்கால ஏழாம் நூற்றாண்டு (கி.பி.700) என்று பல வரலாற்று வல்லுநர்களால் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் உள்ளது.

    திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை.

    யாரும் அறியாதவாறு, தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில்தான் எழுதிய திருமந்திரம் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் புதைத்து வைத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்து விட்டார்.

    அதன் பிறகு நாலாயிரம் வருடங்கள் கழித்து, (திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது மூவாயிரம் வருடங்கள்), தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.700), அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான, திருஞான சம்பந்தப் பெருமான் உதித்தார்.

    அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில், திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார்.

    அப்போது கோவிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைய, அதனால் ஈர்க்ப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம், இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றதே. என்ன என்று பாருங்கள் என்று கூறி மண்ணைத் தோண்டச் செய்தார்.

    அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார்.

    அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அனைவருக்கும் அருளிச் செய்தார்.

    வேறு சில சித்தர் பாடல்களில் இவரின் வாழ்வு பற்றிய மாறுபட்ட குறிப்புகளும் உள்ளன.

    • தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்திதான் இங்கிருப்பவர்.
    • தர்மதேவதையே இந்த நந்தியெம் பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்

    சிவபக்தரான திருமாளிகை தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோவில் மதில் மீது இருந்த நந்திகள் அனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோவில் மதில் மீது நந்திகள் கிடையாது.

    சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது.

    திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம்.

    முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்.

    தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்திதான் இங்கிருப்பவர்.

    இவரது உயரம் பதினான்கு அடி ஒன்பது அங்குலம் ஆகும். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோவில் ஒரே கல் நந்தியின் உயரம் பன்னிரண்டு அடி).

    தர்மதேவதையே இந்த நந்தியெம் பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்

    சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் இடர் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன்.

    பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார்.

    இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள்.

    இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன்.

    அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள்.

    சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார்.

    "கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

    • முதலில் ஆலயத்திற்குள் நுழையும்போது, கோபுரத்தை வணங்கி விட்டு செல்ல வேண்டும்.
    • ஆலயத்தின் உள்ளே சென்றதும் கொடி மரத்தை வணங்க வேண்டும்.

    முதலில் ஆலயத்திற்குள் நுழையும்போது, கோபுரத்தை வணங்கி விட்டு செல்ல வேண்டும்.

    ஆலயத்தின் உள்ளே சென்றதும் கொடி மரத்தை வணங்க வேண்டும்.

    அடுத்து விநாயகப் பெருமானையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டு, வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.

    அதன்பிறகு பிரதான மூலவரையும், அனைத்து பரிவார தெய்வங்களையும் வழிபட்டு வர வேண்டும்.

    1, 3, 5 என்ற அடிப்படையில் பிரகாரம் சுற்ற வேண்டும்

    நிறைவாக சண்டிகேஸ்வரரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும்.

    கோவிலில் அபிஷேகம் நடைபெறும் சமயம் பிரகாரம் சுற்றக் கூடாது.

    கோவிலுக்குள் கோபம் கொள்ளுதல், கடுமையான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

    தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும்.

    கற்பூர தீபம் காட்டும்போது மனதை ஒருநிலைப்படுத்தி சுவாமியைக் காண வேண்டும்.

    நந்தி, மயில், மூஞ்சுறு வாகனங்ளுக்கு நடுவில் செல்லக் கூடாது.

    ஆலயங்களில் வழங்கும் நைவேத்தியப் பிரசாதங்களை இரண்டு கைகளாலும், பயபக்தியுடன் வாங்கி பயன்படுத்துவது நல்லது.

    ஆலயத்தில் வழிபாடு நடக்கும்போது, நெட்டி ஒடித்தல், சோம்பல் முறித்தல் கூடாது.

    வெற்றிலை, பாக்கு அர்ச்சனையில் சேர்க்க வேண்டும். நாம் அதை கோவிலுக்குள் சுவைத்துப் பார்க்க கூடாது.

    ஆலயத்தை விட்டு வெளியில் வரும்போது மீண்டும் கோபுரத்தை வணங்கி வருவது நல்லது.

    • இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள்.
    • எனவே யாகத்திற்கு வேண்டிய பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார்.

    சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன்.

    பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார்.

    இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள்.

    இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன்.

    அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள்.

    சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக் கொண்டு, விமோசனம் கொடுத்தார்.

    "கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

    திருஞானசம்பந்தர், இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாத இருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார்.

    அப்போது சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென சிவபாத இருதயர் விரும்பினார்.

    எனவே யாகத்திற்கு வேண்டிய பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார்.

    சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார்.

    சிவன் பூதகணங்கள் மூலமாக, எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் கொண்ட ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இக்கோவிலில் உள்ள பலிபீடத்தின் அகன்ற பீடத்தில் வைக்கச் செய்தார்.

    பொன் பெற்ற சிவபாத இருதயர் சீர்காழிக்கு சென்று யாகத்தை நடத்தி முடித்தார்.

    பொற்கிழி வைக்கப்பட்ட இந்த பலிபீடம் வெளிப் பிரகாரத்தில் நந்திக்கு அருகில் இருக்கிறது.

    இதனைச் சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறது.

    இங்கிருந்து சிவனிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

    ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத்தேவர் போகரின் சீடர்.

    இவர் இத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்தார்.

    ஒருசமயம் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரை தாக்க முயன்றான்.

    திருமாளிகைத் தேவர், நரசிங்கன் என்னும் மன்னனின் படைகளை கோவில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவாவடுதுறை.

    இன்றும் இவ்வாலயத்தின் மதில்களில் நந்திகள் இல்லையென்பதைக் காணலாம்.

    சிவன் இத்தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம்.

    தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றதும் இத்தலத்தில் தான்.

    திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலிய மகான்களுடைய ஒளி தேக அருள் அலைகள் இருப்பதும் இத்தலத்தில் தான்.

    இவ்வளவு சிறப்புப் பெற்ற திருவாவடுதுறை தலத்தை அவசியம் சென்று தரிசியுங்கள்.

    அது உங்களது பிறவிப் பிணியைப் போக்குவதற்கு அடித்தளம் அமைத்துத் தரும்.

    • கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் திருவாவடுதுறை அமைந்துள்ளது.
    • 5 நிலை கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் திருவாவடுதுறை அமைந்துள்ளது.

    இந்த ஊருக்கு நவகோடி சித்தர்புரம் என்ற ஒரு பெயரும் உண்டு ஒன்பது சித்தர்கள் இவ்விடத்தில் ஒன்பது திசையில் வாழ்ந்ததால் இப்பெயர் வரலாயிற்று.

    சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையும் உலகப்புகழ் பெற்றதுமான திருமந்திரத்தை திருமூலர் இயற்றிய தலம் இது.

    அவர் இத்தலத்தில்தான் சமாதி நிலை உற்றார்.

    இத்தலத்தில் நாம் செல்ல வேண்டியது கோமுக்தீஸ்வரர் ஆலயம்.

    மூலவர்: மாசிலாமணி ஈஸ்வரர் , கோமுக்தீஸ்வரர் அம்பாள்: அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை

    இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    5 நிலை கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

    கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது.

    கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நதிகள் உள்ளன.

    கோபுர வாயிலைக் கடந்தால் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தியுள்ளது.

    இந்த நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி வைத்தருளிய இடமாகும்.

    திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.

    பெரிய நந்திக்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது.

    பிரதோஷ வேளையில் இவருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

    திரு விடைமருதூர் தலத்திற்கான பரிவாரத் தலங்களில் இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக் கொள்வது விசேஷம்.

    சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் தியா கேசர் சந்நிதி உள்ளது.

    பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் இத்தலத்தின் உற்சவ மூர்த்தியான அணைத் தெழுந்த நாயகர் இருக்கிறார்.

    இவர் அம்பாளை அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம்.

    இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

    • கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"

    கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை".

    கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

    கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுகி தீர்த்தம் உள்ளது.

    கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.

    கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,

    பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

    எனவே செல்வம் பெற விரும்புபவர்கள் இத்தலம் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    ×