search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமுருகன்காந்தி"

    திருமுருகன்காந்தி மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பூக்கடை போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். #ThirumuruganGandhi
    சென்னை:

    மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜெனிவாவில் நடந்த மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து குற்றம்சாட்டி பேசினார். இதனை தொடர்ந்து தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் திருமுருகன் காந்தி மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னர் திருமுருகன்காந்தி மீது தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.



    இந்த நிலையில் பூக்கடை போலீசார் அவர் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருமுருகன்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் டிசம்பர் 5-ந்தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருமுருகன்காந்தி மீது இதுவரையில் 16 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #ThirumuruganGandhi
    மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    சென்னை:

    மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார்.

    நார்வேயிலிருந்து கடந்த 9ந்தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

    சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில், ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார்.

    இதையடுத்து, தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருமுருகன்காந்தியை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை நீதிபதி செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்து, மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    அந்த உத்தரவில், திருமுருகன்காந்தி ஜாமீன் கேட்டு கீழ் கோர்ட்டை அணுகி, நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். #ThirumuruganGandhi
    ×