என் மலர்
செய்திகள்

அனுமதியின்றி போராட்டம் நடத்திய திருமுருகன்காந்தி மீது மேலும் ஒரு வழக்கு
திருமுருகன்காந்தி மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பூக்கடை போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். #ThirumuruganGandhi
சென்னை:
மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பூக்கடை போலீசார் அவர் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருமுருகன்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் டிசம்பர் 5-ந்தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமுருகன்காந்தி மீது இதுவரையில் 16 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #ThirumuruganGandhi
மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெனிவாவில் நடந்த மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து குற்றம்சாட்டி பேசினார். இதனை தொடர்ந்து தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் திருமுருகன் காந்தி மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னர் திருமுருகன்காந்தி மீது தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.

இந்த நிலையில் பூக்கடை போலீசார் அவர் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருமுருகன்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் டிசம்பர் 5-ந்தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமுருகன்காந்தி மீது இதுவரையில் 16 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #ThirumuruganGandhi
Next Story






