search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநந்தீஸ்வரர்"

    • இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.
    • காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    துன்பங்கள் நீங்கி மன அமைதி தரும் திருநந்தீஸ்வரர்

    குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திரு நந்திக்கரையில் திருநந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்த கோவிலை விட ஏற்ற கோவில் எதுவும் இல்லை எனலாம்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    காளையை சிவபெருமான் அடக்கி இழுத்து வந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது.

    காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.

    27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்துக்கு ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதை குறிக்கும் வகையில் மண்டபத்தை சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    பொதுவாக பரிகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது.

    ஆனால் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

    இந்த கோவிலில் சிவனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி மன அமைதி கிடைப்பதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள குளத்து நீர் இந்நாள் வரை வற்றியதாக இல்லை.

    பகவான் இங்கு சுயம்பாக காட்சி தருவதால் முப்பத்தி முக்கோடி தேவர்களும் நேரடியாக தொண்டு செய்வதாக நம்பப்படுகிறது.

    இக்கோவிலில் அணையா விளக்கு ஒன்று காணப்படுகிறது.

    இவ்விளக்கில் எண்ணை தொடர்ந்து ஊற்றி வரும் பக்தர்களின் வேண்டுதல்களையும், இனி எண்ணை ஊற்ற வேண்டும் என எண்ணுபவர்களுடைய வேண்டுதல்களையும் இறைவன் ஏற்று அருள்புரிவார் என்பது ஐதீகம்.

    ×