search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டம் தொடக்கம்"

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    பவானி, காவேரி மற்றும் அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், கூடுதுறை என பலர் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் தினசரி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து காவேரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதை தொடர்ந்து கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நலன் கருதி வெப்பத்தை தணிக்கும் வகையில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நீர் மோர் வழங்கும் திட்டத்தை சங்கமேஸ்வரர் கோவில் ஆணையாளர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இதில் சங்கமேஸ்வரர் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • தைப்பூசத்தை முன்னிட்டு அஞ்சலகங்களில் பழனி கோவில் பிரசாத சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
    • ஒருவர் எவ்வளவு பிரசாதங்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஈரோடு:

    ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தைப்பூசத்தை முன்னிட்டு அஞ்சலகங்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசாத சிறப்பு விற்பனை கடந்த 21-ந் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களான பொதுமக்கள் அஞ்சலகங்களுக்கு சென்று பணம் செலுத்தினால் பழனியில் இருந்து பிரசாதங்கள் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இதற்கு கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும். ஒருவர் எவ்வளவு பிரசாதங்கள் வேண்டு மானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஒரு பிரசாத பையில் பழனி பஞ்சாமிர்தம் 500 கிராம், பழனி தண்டாயுதபாணி படம் ஒன்று, விபூதி 10 கிராம் இருக்கும். இந்த சேவை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மனநல சேவை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • தமிழகம் முழுவதும் மனநோயாளிகள் நலனை பேணும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் மனநோயாளிகள் நலனை பேணும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் நல்லாதரவு மன்றம் (மனம்), 'நட்புடன் உங்களோடு மனநல சேவை' ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ நிலையத்தில் இன்று காலை நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு மருத்து வமனை கருத்தரங்கு கூடத்தில் மனநல சேவைக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் அர்ஜுன் குமார், அரசு ஆஸ்பத்திரி மனநல சிகிச்சை பிரிவு துறை தலைவர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மனநல சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு 2 ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் பயிற்சிகள் தரப்பட உள்ளன.

    பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மனநல பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சேவை செய்யும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதுவும் தவிர தமிழகத்தில் உள்ள அரசு மனநல மருத்துவ மையங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் 75 அவசரகால ஆம்புலன்ஸ்களும் வழங்கப்பட உள்ளன.

    • திருச்சியில் உள்ள பள்ளியில் ஏழை மாணவர்கள் பசியாறும் வகையில் காலை உணவு வங்கி திட்டம் தொடங்கப்பட்டது
    • திருமண நாள், பிறந்த நாள், பெற்றோர் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் நாட்களில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க தேவையான மளிகைப் பெருட்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்டவற்றையும் வழங்கலாம்

    திருச்சி:

    திருச்சி மாநகரில் மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மக்கள் பங்களிப்புடன் 2007-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 2018-ம் ஆண்டு முதல் காலை உணவாக இட்லி, இடியாப்பம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், உப்புமா, சப்பாத்தி, தயிர் சாதம் ஆகியவை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் இநத பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையிலும் தேவையான உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும மக்கள் பங்களிப்புடன் 'காலை உணவு வங்கி' என்ற முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழாவுக்கு திருச்சி தேசிய கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில பாரத ஐயப்பா சேவா சங்க புரவலர் என்.வி.வி.முரளி 'காலை உணவு வங்கி' திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை சிறப்புரையாற்றினார்.

    இத்திட்டம் குறித்து இத்திட்டத்தை வடிவமைத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வு பெற்ற முதல்வர் சிவக்குமார் கூறியதாவது:-

    காலை உணவுத் திடத்துக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் உதவிகளை செய்து வருகின்றனர்.

    இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் திருமண நாள், பிறந்த நாள், பெற்றோர் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் நாட்களில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க தேவையான மளிகைப் பெருட்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்டவற்றையும் வழங்கலாம்.

    இவை பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பள்ளியிலேயே உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும். காலையில் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை வலுப்படுத்த 'காலை உணவு வங்கி' திட்டம் உதவும் என்றார்.

    பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் கூறுகையில், பெற்றோர்கள் காலையிேலயே வேலைக்கு சென்று விடுவதாலும், ஏழ்மை நிலையில் இருப்பதாலும் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவை வழங்கி வருகிறோம்.

    இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருகின்றனர். சோர்வில்லாமல் கற்றல் பணியிலும் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே பள்ளியில் அட்சய பாத்திரம் என்ற காய்கறி வழங்கும் திட்டம் வெற்றிக்கரமான செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    ×