search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாலிக்கு தங்கம்"

    அசாம் மாநிலத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏழை மணப்பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பிலான 11.6 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #AssamBudget
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில நிதி மந்திரி ஹம்மந்தா பிஸ்வா சர்மா சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பா.ஜனதா அரசு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தது.

    ஏழை மணப்பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பிலான 11.6 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குடும்பத்தில் முதல் 2 பெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

    ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு இந்த சலுகை கிடைக்கும்.

    தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிலோ 3 ரூபாய் விலையில் 57 லட்சம் குடும்பங்களுக்கு மத்திய அரசு அரிசி வினியோகம் செய்து வருகிறது. இந்த விலை 1 ரூபாயாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் இலவச கல்வி பெற வேண்டுமானால் அவர்களது பெற்றோரின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.1 லட்சமாக இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 3-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அவர்களுக்கு பாடப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

    ரூ.700 கோடி செலவில் மாணவ-மாணவிகளுக்கான இலவச சீருடை, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேற்படி படிப்புக்காக வாங்கப்பட்ட கல்வி கடன்களில் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

    இது தவிர மேலும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. #AssamBudget
    வேலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்க சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. #Thalikkuthangam
    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக கடந்த 22-ந் தேதி 707 பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் 690 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.

    பயனாளிகளிடம் சமூக நலத்துறை அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், எஸ்.விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர்.

    முதற்கட்டமாக அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் வெளியாட்கள் உள்ளேயும், அலுவலக ஊழியர்கள் வெளியேயும் செல்லாதபடி அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    இச்சோதனையில் பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், கழிவறை, மேசையின் அடியில் என பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.76,500 லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது.

    இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி, கணக்காளர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.



    நேற்று தாலிக்கு தங்கம் பெற்ற 690 பேரிடமும் இருந்து ரூ.500 முதல் ரூ.1,500 வரை சமூகநலத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்று தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் இந்த பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பண வசூல் செய்த சமூக நலத்துறை ஊழியர்கள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.  #Thalikkuthangam

    ×