search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமறைவு குற்றவாளி"

    விருத்தாசலத்தில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த தெற்குவெள்ளூரை சேர்ந்தவர் வேல்முருகன். விருத்தாசலம் பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த வேல்முருகன், தலைமறைவானார்.

    15 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள வேல்முருகனை கைது செய்யுமாறு, விருத்தாசலம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான தனிப்படைபோலீசார், தஞ்சாவூர் மாவட்டம், கரிகாடு பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த வேல்முருகனை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து வைர கற்களை இறக்குமதி செய்தபோது சுங்க வரியை ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிரவ்மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சூரத் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #NiravModi
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி தொழிலை விருத்தி செய்வதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கினார்.

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 400 கோடி ரூபாயை கடன் வாங்கி இருந்தார்.

    கடனை திருப்பி கொடுக்காமல் அவர் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனால் அவர் கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

    அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவர் செய்த பணப்பரிமாற்றம் மோசடி குறித்து அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வைர கற்களை இறக்குமதி செய்தபோது சுங்க வரியை ஏய்ப்பு செய்ததாக அவர் மீது சூரத் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

    அப்போது நிரவ்மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும் நிரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். #NiravModi
    தமிழகத்தையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு வழக்கில், 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஒருவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். #CoimbatoreBlast
    சென்னை:

    தமிழகத்தையே உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அன்று நடந்தது. கோவையில் 11 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் பரிதாபமாக பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட நூகு என்ற ரஷீத் (வயது 44). என்பவர் தலைமறைவாகி விட்டார். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இவர் கத்தார் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டார். இவரை கோர்ட்டு தலைமறைவு குற்றவாளியாக அறிவித்திருந்தது.

    சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு தனிப்படை போலீசார் இவரைத் தேடி வந்தனர். அனைத்து விமான நிலையங்களிலும், இவரைப்பற்றி புகைப்படத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் நூகு என்ற ரஷீத் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதமன் தலைமையில், போலீஸ் படையினர் சென்னை விமான நிலையத்தில் மாறுவேடத்தில் காத்திருந்தனர்.

    அப்போது கத்தார் நாட்டில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய நூகு என்ற ரஷீத்தை மாறுவேடத்தில் காத்திருந்த போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    சென்னையில் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.  #CoimbatoreBlast
    திண்டுக்கல்லில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் 75 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்களையும், கோர்ட்டுகளில் ஜாமீன் கேட்டு வெளி வந்து பின்னர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர்களையும் பிடிக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் நகர் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும போலீசாரைக் கொண்ட தனிப்படையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்தும், வாகன ரோந்து மேற்கொண்டும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் போலீசாரால் தேடப்பட்டு வந்த 75 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவிக்கையில், மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவர்களது முகவரி மற்றும் பெயர் விபரங்களை கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

    தற்போதுள்ள முக அமைப்புக்கும் தலைமறைவான பாது இருந்த அமைப்புக்கும் மாறுபாடு தென்பட்டது. இதனையடுத்து அனைத்து விபரங்களையும் சரிபார்த்த பிறகு தலைமறைவு குற்றவாளிகள் என உறுதி செய்யப்படடது. இவர்களில் பலர் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் ஆவார்கள். தொடர்ந்து இது போன்ற ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். #tamilnews
    ×