search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் ஒரே நாளில் தலைமறைவு குற்றவாளிகள் 75 பேர் கைது
    X

    திண்டுக்கல்லில் ஒரே நாளில் தலைமறைவு குற்றவாளிகள் 75 பேர் கைது

    திண்டுக்கல்லில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் 75 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்களையும், கோர்ட்டுகளில் ஜாமீன் கேட்டு வெளி வந்து பின்னர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர்களையும் பிடிக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் நகர் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும போலீசாரைக் கொண்ட தனிப்படையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்தும், வாகன ரோந்து மேற்கொண்டும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் போலீசாரால் தேடப்பட்டு வந்த 75 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவிக்கையில், மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவர்களது முகவரி மற்றும் பெயர் விபரங்களை கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

    தற்போதுள்ள முக அமைப்புக்கும் தலைமறைவான பாது இருந்த அமைப்புக்கும் மாறுபாடு தென்பட்டது. இதனையடுத்து அனைத்து விபரங்களையும் சரிபார்த்த பிறகு தலைமறைவு குற்றவாளிகள் என உறுதி செய்யப்படடது. இவர்களில் பலர் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் ஆவார்கள். தொடர்ந்து இது போன்ற ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×