search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாரித்தல்"

    • சேலம் அருகே உள்ள அனுப்பூர் பகுதியில் குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் அருகே உள்ள அனுப்பூர் பகுதியில் குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

    அட்மா திட்ட இனங்கள் பற்றியும், உழவன் செயலி யின் முக்கியத்துவம் பற்றி யும், மற்றும் முக்கிய மான பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றியும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கந்தசாமி, குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரிக்கும் முறை குறித்து சேலம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கோபி ஆகியோர் விளக்க மளித்தனர்.

    வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி வட்டார வேளாண்மை இயக்குநர் சரஸ்வதி பேசினார். தொடர்ந்து, தரிசு நில ங்களை கண்டறிந்து விளை நிலங்களாக மாற்றுதல், வேளாண்மையில் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் பற்றியும், கிராம ஊராட்சிகளில் உள்ள இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

    இதில் தோட்டக்கலை த்துறை உதவி அலுவலர் அருட்செல்வம், ஊராட்சி தலைவர் விஜயன், உதவி கால்நடை மருத்துவர் பிரியா, உதவி வேளாண்மை அலுவலர் சிவனேசன் உள்ளிட்ட பல்வேறு துறை யைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உதவித் தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.

    • பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    பவானி:

    பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சி பவானி வேளாண்மை உதவி இயக்குனர் வனிதா தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் அருண்குமார் மண்புழு படுக்கை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    ஜே.கே.கே.எம். கோபி வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ஹாதில்மோன் மண்புழு உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிவித்தார்.

    பவானி உதவி வேளாண்மை அலுவலர் சித்தையன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

    மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×