search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தட்டை"

    மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று எள்ளுத்தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - கால்கிலோ
    உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    வெல்லம் - 150 கிராம் (தூளாக்கவும்)
    வெள்ளை எள் - 100 கிராம்
    நல்லெண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பச்சரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, மாவு தயாரித்துக்கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.

    அவற்றுடன் எள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சூடானதும் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    பின்னர் பாகுவை அரிசி மாவு கலவையில் ஊற்றி கிளறவும்.

    இந்த மாவை தட்டைகளாக தட்டி உலற வைக்கவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கலாம்.

    சூப்பரான எள்ளுத்தட்டை ரெடி.

    இந்த தட்டையை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுவைமிகுந்த மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று அரிசி தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அ‌ரி‌சி - 2 கப்
    ப‌ச்சை ‌மிளகா‌ய் - 3
    பெரு‌ங்காய‌த்தூள் - ‌ சி‌றிதளவு
    எ‌ள் - 1 டீஸ்பூன்
    தே‌ங்கா‌ய் துருவ‌ல் - கா‌ல் க‌ப்
    வெ‌ண்ணெ‌ய் - சிறிதளவு
    உ‌ப்பு, எ‌ண்ணெ‌ய் - தேவைக்கு



    செய்முறை:

    அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி மாவாக இடித்துக்கொள்ளவும்.

    பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியை சூடாக்கி அதில் மாவை கொட்டி லேசாக வறுத்தெடுக்கவும்.

    அதனுடன் பெருங்காயத்தூள், எள், தேங்காய் துருவல், வெண்ணெய், பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்பு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி தட்டை மாவு பதத்தில் பிசைந்து தட்டைகளாக தட்டிக்கொள்ளவும்.

    துணியில் தட்டைகளை பரப்பி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான அரிசி தட்டை ரெடி.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் மிளகுத்தட்டை. இன்று இந்த தட்டையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்
    உளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகு - அரை டேபிள் ஸ்பூன்
    வெண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு
    பொட்டு கடலை மாவு - கால் கப்
    கடலை பருப்பு - கால் கப்



    செய்முறை :

    மிளகை இரவில் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

    கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

    உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

    பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து அதனுடன் உளுந்தம் பருப்பை சேர்த்து மாவாக்க வேண்டும்.

    அதனுடன் வெண்ணெய், கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை மாவு, மிளகு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் தட்டைகளாக தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மிளகு தட்டை ரெடி.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டீ மற்றும் காபியுடன் சாப்பி தட்டை சூப்பராக இருக்கும். இன்று வேர்க்கடலை தட்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - அரை கப்
    பொட்டுக்கடலை - அரை கப்
    கடலை மாவு - அரை கப்
    அரிசி மாவு - அரை கப்
    மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத் தூள் - சிறிதளவு
    வெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    வாணலியில் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்தெடுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பொட்டுக் கடலையையும் தூளாக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலையை போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், வெண்ணெய் ஆகியவற்றை கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    பதத்துக்கு வந்ததும் தட்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை தட்டை ரெடி.

    இதனை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை செய்து கொடுக்கலாம். இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    அரிசி மாவு - 2 கப்
    உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



    செய்முறை :

    முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஒரு துணியில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும். ( நன்றாக எண்ணெய் அடங்கிய பின்னர் தான் எடுக்க வேண்டும்)

    இதே போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான தட்டை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×