search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விலை திடீர் உயர்வு"

    • திண்டுக்கல் மார்க்கெட்டில் பெட்டி ரூ.500 வரை ஏலம் போனது. சில்லறை கடைகளில் கிலோ ரூ. 25க்கு விற்கப்படுகிறது.
    • இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, எம்.எம். கோவிலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இவை திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த வாரத்தில் தக்காளி கிலோ ரூ.12க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவமழை அவ்வப்போது மாவட்டத்தில் பரவலாக பெய்தது. இதனால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டது. செடியில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு காய்கள் வருகிறது. இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டில் பெட்டி ரூ.500 வரை ஏலம் போனது. சில்லறை கடைகளில் கிலோ ரூ. 25க்கு விற்கப்படுகிறது.

    திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று 2 டன் தக்காளி வரத்து வந்துள்ளது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது. இது குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், பந்தல் அமைத்து தக்காளி சாகுபடி செய்யப்பட்ட காய்கள் மட்டுமே வரத்து வந்துள்ளது. மழை கார ணமாக தக்காளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை நீடித்தால் இன்னும் விலை உயரும் என்று தெரிவித்தார்.

    இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர். மேலும் தக்காளி வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.

    • 21 கிலோ தக்காளி பெட்டி ரூ.1100க்கு விற்பனையாகிறது.
    • தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் பவானி ஆறு செல்வதால், அங்குள்ள விளை நிலங்களில் விவசாயிகள் நேந்திரன், கதளி, செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழைகளை பயிரிட்டு வருகின்றனர்.

    காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, புடலங்காய், சுரக்காய், பூசணிக்காய், தக்காளி போன்ற நாட்டு காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் காரமடையில் உள்ள சந்தை, மேட்டுப்பாளையம் மார்க்கெட், கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் தக்காளியின் கொள்முதல் விலை மற்றும் மார்க்கெட்டுகளிலும் குறைவான விலைக்கே தக்காளிகள் விற்பனை யாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்ததுடன், அவர்களுக்கு பொருளாதார சிக்கல்களும் ஏற்பட்டது.

    இதன் காரணமாக தக்காளி பயிரிட்டிருந்த பலரும் தக்காளியை அழித்து விட்டு, மாற்று பயிரினை நட்டு பராமரிக்க தொடங்கினர். ஒரு சிலர் மட்டுமே தக்காளி பயிரிட்டிருந்தனர்.இந்த நிலையில் தற்போது தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக காரமடை சந்தையில் 21 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி கிலோ ரூ.1100க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ.50 முதல் ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை உயர்வால் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
    • தக்காளி செடிகள் வயலிலேயே அழுகி வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, பெல்ராம்பட்டி, கரகூர், பென்னாகரம், காரிமங்கலம், அத்திமுட்லு, திருமல்வாடி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

    தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரது அதிகரிப்பால் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் தக்காளி விலை 5 ரூபாய் முதல் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தற்பொழுது தொடர்ந்து தமிழக முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பத்து நாட்களாக மழை பெய்து வருவதால் தக்காளி செடிகள் வயலிலேயே அழுகி வருகிறது.

    இதனால் தக்காளி வரத்து தினசரி மார்க்கத்திற்கு வெகுவாக குறைந்துள்ளது. மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் திடீரென தக்காளி விலை உயர்ந்துள்ளது உழவர் சந்தையில் கிலோ 6 ரூபாயில் இருந்த தக்காளி தொடர்ந்து கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமார்க்கெட்டில் கிலோ தக்காளி 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • மழையால் 10 வண்டிகள் மட்டுமே வருகிறது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை

    கோவை மேட்டுப்பா ளையம் சாலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிற்கு கர்நாடாக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

    தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது.

    கர்நாடகாவில் இருந்து மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. பருவமழைக்கு முன்பு தினமும் கர்நாடகாவில் இருந்து 20க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளிகள் கொண்டு வரப்படும். மழையால் 10 வண்டிகள் மட்டுமே வருகிறது.

    அதில் 5 வண்டிகள் கேரளாவிற்கு சென்று விடுகிறது. இதனால் மாவட்டத்தில் ஒரு கிலோ ரூ.10க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது விலை உயர்ந்து காணப்படுகிறது. எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கிலோ ரூ.30க்கு விற்பனை யாகி வருகிறது. டி.கே.மார்க்கெட்டுக்கு பூலுவ ப்பட்டி, கிணத்து க்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு வரும். தற்போது மழை காரணமாக வரத்து குறைந்து விட்டது. பூலுவப்பட்டி, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து மட்டுமே தக்காளி வருகிறது. வரத்து குறைவால் தக்காளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது. இது வரும் நாட்களில் இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×