search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி விமானம்"

    • என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உணர்ந்தார்.
    • சிறிது நேரம் கழித்து அதில் பயணம் செய்த பயணிகள் வேறு ஒரு விமானத்தின் மூலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு இன்று காலை 7.40 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உணர்ந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த விமானம் திருப்பபட்டு மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் 8.20 மணிக்கு பத்திரமாக தரை இறங்கியது. சிறிது நேரம் கழித்து அதில் பயணம் செய்த பயணிகள் வேறு ஒரு விமானத்தின் மூலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • விமானம் மீண்டும் அதிகாலை 4.25 மணிக்கு சென்னைக்கு திரும்பி வரும்.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு வர வேண்டிய பயணிகள் விமானம் 3 மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. இந்த விமானம் வழக்கமாக, டெல்லியில் இருந்து வந்த பின்னர் சென்னையில் இருந்து நள்ளிரவு 12.25 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டு செல்லும்.

    இதே விமானம் மீண்டும் அதிகாலை 4.25 மணிக்கு சென்னைக்கு திரும்பி வரும். அதன் பின்பு அதே விமானம், மீண்டும் உள்நாட்டு விமானமாக, அதிகாலை 5.5 மணிக்கு, சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லும். ஆனால் ஏற்கனவே டெல்லியில் இருந்து 3 மணிநேரம் விமானம் தாமதமாக வந்ததால் அந்த விமானத்தின் இலங்கை, சென்னை, அந்தமான் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • பயணியின் நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
    • கராச்சி விமான நிலையத்தில் பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

    கராச்சி:

    டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்றபோது விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    அவரது நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக அந்த விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. முன்னதாக அங்கு அந்த பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

    விமானம் இறங்கியதும் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பயணியை சோதித்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வுகள் காணப்பட்டதால் விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி வைக்கப்பட்டது.
    • விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    புது டெல்லி:

    டெல்லியிலிருந்து வதோதரா நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி விடப்பட்டது. நேற்று டெல்லியிலிருந்து வதோதராவிற்கு சென்ற இண்டிகோ 6E-859 விமானத்தை இயக்கிய விமானிகள் விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பப்பட்டது. இரவு 8.30 மணியளவில் விமானம் ஜெய்ப்பூர் சென்றடைந்தது. விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் அதிகாரி கூறியதாவது:-

    விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வுகள் காணப்பட்டதால் விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி வைக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.

    மேலும், இண்டிகோவின் போட்டி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தற்போது ரெகுலெட்டரி ஸ்கேனிங் கீழ் உள்ளதாக டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஜுன் 19ம் தேதி முதல் விமானத்தில் இதுவரை 8 முறை கோளாறுகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறினர். டிஜிசிஏ இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தொடர்ந்து, "பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான சேவையை தர பட்ஜெட் கேரியர் தோல்வியடைந்துவிட்டது" என்று விமான ஒழுங்குமுறை அதிகாரி கூறினார்.

    ×