search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைவம் வைணவம்"

    • முருகப் பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது.
    • கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன.

    முருகனின் அறுபடைத் தலங்களில் திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகத் திகழ்கிறது.

    சூரனை வென்ற முருகனுக்குப் பரிசாகத் தன் மகள் தெய்வானையை தேவேந்திரன் மணம் செய்வித்த திருத்தலம் இதுவாகும்.

    சைவம் (சிவவழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), சாக்தம் (அம்பாள் வழிபாடு),

    சௌரம் (சூரிய வழிபாடு), கவுரமாரம் (முருக வழிபாடு) என்னும் ஆறு வகையான மதங்கள் பழங்காலத்தில் இருந்தன.

    அவற்றை இணைக்கும் தலமாக திருப்பரங்குன்றம் கோவில் திகழ்கிறது.

    இதை கருவறையில் காணலாம்.

    ஐராவதம் என்னும் தேவலோகத்து யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானையை மணம் செய்த விழா

    பங்குனி உத்திரத்தையொட்டி, இங்கு பிரம்மோற்சவமாக நடக்கிறது.

    முருகப் பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது.

    கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன.

    இந்தப் படிகளில் ஏறும்போது "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே செல்வது நல்லது.

    ×