search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலத்தில்"

    • இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார்
    • ன்னேற்பாடுகளை தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் பார்வையிட்டார்.

    நாகர்கோவில்:

    தி.மு.க.வின் 2-வது இளைஞரணி மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதனையொட்டி மாநாடு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இளைஞர் அணி மாநாடு விளக்க இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து இளைஞர் அணி மாநாடு விளக்க இரு சக்கர வாகன பேரணியை நாளை மறுநாள் (15-ந்தேதி) தொடங்கி வைக்கிறார்.

    கன்னியாகுமரியில் அதற்கான முன்னேற்பாடுகளை தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் பார்வையிட்டார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணியை தொடங்கி வைக்க உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 14-ந்தேதி இரவு கன்னியாகுமரி வந்து சேருகிறார். மறுநாள் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார். பின்னர் சிறிது தூரம் அவரும் இருசக்கர வாகன பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த பேரணியில் 200 பைக்குகள் இடம் பெறுகின்றன. தமிழ்நாடு 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் உள்ளடக்கிய மண்டலத்தில் உள்ள சட்டமன்ற ெதாகுதிகளில் 50 பைக்குகளில் சென்று மாநாடு விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கி விளக்குவர். பின்னர் நவம்பர் 27-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளன்று பைக் பேரணி சென்னை சென்றடையும்.

    • சேலத்தில் நேற்று காலை முதலே வானத்தில் கரு மேகங்ககள் திரண்டன.
    • சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்ப்டடி, ஜங்சன், கொண்டலாம்ப்டடி என அனைத்து பகுதிகளிலும் 4 மணிக்கு பெய்த தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலத்தில் நேற்று காலை முதலே வானத்தில் கரு மேகங்ககள் திரண்டன. பின்னர் சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்ப்டடி, ஜங்சன், கொண்டலாம்ப்டடி என அனைத்து பகுதிகளிலும் 4 மணிக்கு பெய்த தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது.

    மேலும் இரவிலும் கன மழையாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.கிச்சிப்பாளையம் மெயின்ரோட்டில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீரும் அதிக அளவில் ஓடியதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் நாராயண நகர், கருவாட்டு பாலம், சித்தேஸ்வரா கருங்கல்பட்டி, களரம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்கள் உள்பட பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதிகள் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    சேலம் புறநகர்

    இதே போல சேலம் புறநகர் மாவட்டத்தில் ஏற்காடு, பெத்தநாயக்கன் பாளையம்,, சங்ககிரி, தம்மம்பட்டி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த மக்கள் சற்று நிம்மதியாக தூங்கினர்.

    இதற்கிடையே சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, பெரமனூர், கிச்சிப்பாளையம், தாதா காப்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல இடங்களில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் கொசுக்கடியால் தவித்தனர்.

    56.06 மி.மீ. பதிவு

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 23.4 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காடு 6.4, பெத்தநாயக்கன் பாளையம் 5, சங்ககிரி 4.4, தம்மம்பட்டி 4, ஆனைமடுவு 4, கெங்கவல்லி 3, ஓமலூர் 2.1, கரியகோவில் 2, ஆத்தூர் 1.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 56.06 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    ×