search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதமடைந்த சாலை"

    • இரவு நேரங்களில் பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் விழுந்து காயமுற்று வருகின்றனர்.
    • தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் காந்திகிராமம், காமராஜபுரம், அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியை ஸ்ரீவில்லிபுதூர்-மேகமலை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. அறிவி ப்பிற்கு பின்னர் வனத்துறையினர் மலை க்கிராம பொது மக்களுக்கு பல்வேறு கட்டு ப்பாடுகளை விதித்துள்ளனர்.

    மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைக்கிரா மங்களில் சாக்கடை வடிகால், சிமெண்டு ரோடு உள்ளிட்ட எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள அனுமதி வழங்குவதில்லை. இதனால் மலைக்கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே கிராமங்களில் அமைக்கப்ப ட்டிருந்த சிமெண்டு சாலை மற்றும் சாக்கடை வடிகால்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைப்பதற்கு கூட வனத்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மலைக்கிராம பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே வருசநாடு அருகே காந்திகிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை தொடர் மழையின் காரணமாக சேதமடைந்தது. இதனை சீரமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்காத காரண த்தால் தற்போது சிமெண்டு சாலை முழுவதுமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த சாலை வழியாக செல்லும் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. அதேபோல இரவு நேரங்களில் பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் விழுந்து காயமுற்று வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிரா மங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிராமங்களுக்கான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறி உள்ளது.
    • பொதுமக்கள் விளை பொருட்களை தலைசுமையாகவோ, மாட்டு வண்டிகளிலோ எடுத்து வந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பூசணியூத்து, முத்தூத்து, தேக்கிளைகுடிசை, திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பயிர்கள் ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

    இந்தநிலையில், இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினரின் தடை காரணமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களுக்கான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறி உள்ளது.

    இதனால் ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சாலை வழியாக இயக்க முடியவில்லை. எனவே இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விளை பொருட்களை சிங்கராஜபுரம் கிராமம் வரை தலைசுமையாகவோ அல்லது மாட்டு வண்டிகளிலோ எடுத்து வந்து அதன் பின்னர் லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

    இதனால் நேர விரையம் ஏற்பட்டு விளை பொருட்களை உரிய நேரத்திற்கு சந்தைக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கிராமங்களுக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிப்.6- இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலத்தின் மீது ஜே.சி.பி. எந்திரம் மூலம் ரோட்டை சீரமைக்க ரோட்டை தோண்டி எடுத்தனர்.
    • நெடுஞ்சாலைத் துறையினர் கோட்டை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.

     காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் தென்பெ ண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் வழியாகத்தான் காவேரிப்பட்டி னத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு மற்றும் வெளியூருக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.

    இதில் உள்ள ரோடு மிகவும் பழுதடைந்ததால் நெடுஞ்சாலை துறையால் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலத்தின் மீது ஜே.சி.பி. எந்திரம் மூலம் ரோட்டை சீரமைக்க ரோட்டை தோண்டி எடுத்தனர். பின்பு நெடுஞ்சாலைத் துறையினர் கோட்டை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.

    காவேரிப்பட்டினத்தில் வருகிற 18, 19 மாசி மாத அமாவாசை முன்னிட்டு அங்காளம்மன் பண்டிகை நடைபெறுகிறது. அப்பொழுது தென் பண்ணையாற்றில் பாலத்தின் மீது அம்மனுக்கு நேர்த்திக்கடனாக அலகு குத்துதல், சங்கிலி இழுத்தல், எலுமிச்சம்பழம் குத்துதல், காளி வேடம், மற்றும் அம்மன் தேர் வலையாகத்தான் வரும். அப்பொழுது பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுவார்கள். எனவே உடனடியாக பாலத்தின் மீது உள்ள ரோட்டை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
    • செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிக அளவில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலமாக இருப்பதால் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கிறது. வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்கள் பழுதடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை யில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மழை காலமாக இருப்பதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மழையின் காரணமாக மலைச் சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • ஆபத்தாக உள்ள இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த வாரம் முழுவதும் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மலைச் சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கொடைக்கானல் அருகே பெரியகுளம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் அடுக்கம், குருடிக்காடு பகுதியில் சாலை சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் வழியே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது அந்தப்பகுதியில் சாலையை சீரமைக்கும் பணியானது நெடுஞ்சாலைத் துறை மூலமாக நடைபெற்று வருகிறது. ஆபத்தாக உள்ள இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வருகின்றனர்.

    தொடர்ந்து கொடைக்கானலில் மழை காலம் தொடங்க உள்ளதால் ஆபத்தான இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    ×