search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வ மகள் சேமிப்பு திட்டம்"

    • செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
    • மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்கான சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மகள் எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

    செல்வ மகள் சேமிப்பு திட்டம் உங்கள் மகளை லட்சாதிபதியாக்கும். இதற்கு, உங்கள் மகள் பிறப்பிலிருந்தே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.

    செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டித் திருத்தம் செய்யப்படுகிறது. ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இப்போது இந்த ஆண்டு வட்டி 8 சதவீதமாக உள்ளது. முன்னதாக இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் 7.60 சதவீத வட்டியை வழங்கியது. அதாவது, 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில், வட்டி 40 bps அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கலாம்.

    சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.

    செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, 12 தவணைகளில் ரூ. 12,500 முதலீடு செய்திருந்தால், இந்தக் கணக்கின் முதிர்ச்சியில் 8% வட்டி வருமானம் கிடைக்கும். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தொடர்ச்சியான முதலீட்டிற்குப் பிறகு, மகளுக்கு 21 வயதாகும்போது, முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறலாம். SSY திட்டத்தில் முதிர்ச்சியில் சுமார் 60 லட்சம் பெறலாம்.

    • உடுமலை அஞ்சல் உட்கோட்டம் மற்றும் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடந்தது.
    • செயலாளர் கணேசன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    உடுமலை:

    தேசிய அஞ்சல் வாரம் அக்டோபர் 9 முதல் 13-ந்தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, நிதி வலுவூட்டல் நாள் உடுமலை அஞ்சல் உட்கோட்டம் மற்றும் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடந்தது.

    இதில் 250 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில், அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், ஜெயசீலன், உட் கோட்ட ஆய்வாளர் வெங்கட், இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் ரவி ஆனந்த், செயலாளர் கணேசன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    ×