search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மெரினா கடற்கரை"

    சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில், இன்று மக்கள் கடற்கரை வரத் தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைனில் தேர்வுகள் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டதில் ஈடுபடப் போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலை மூடப்பட்டது.

    மேலும், இன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

    சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை வைக்கப்படும் என அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.#TNMinister #Pandiarajan
    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ் பண்பாட்டு மையம் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் மாணவர்களை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறேன்.

    இதற்காக தமிழ் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் இப்பல்கலைக்கழகத்தில் அகராதி சார்ந்த இணைச்சொல், எதிர்சொல், சொல் செயலி போன்றவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக சொற்குவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை இயங்க தொடங்கிவிட்டது. இதேபோல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜோகனஸ்பர்க் பல்கலைக்கழகம், மலேசியா பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இந்த ஆண்டு தமிழ் ஆய்வு இருக்கை தொடங்கப்பட உள்ளது.

    தமிழின் தொன்மையை உலகத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டுவதற்காக யுனெஸ்கோவின் உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை திருக்குறளுக்கு பெற்றுத்தர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் ஆய்வு மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் இணையவாசல் உருவாக்கப்பட உள்ளது. தமிழுக்கு 63 மாநில அரசு விருதுகளும், 8 மத்திய அரசு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    தொல்காப்பியருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை வைக்கப்படும். தமிழ் பல்கலைக்கழகத்தை உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 100 இடங்களுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Pandiarajan 
    சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ரூ.50 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. டிச. 5-ல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Jayalalithaa
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.50.8 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பல்வேறு கலை அம்சங்களுடன் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் நடக்கிறது.

    கடந்த மே 7-ந்தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்கள். அதை தொடர்ந்து நினைவிடம் கட்டுமான பணிகள் தொடங்கின.

    தற்போது ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மண்டபத்துக்கான தூண்கள் அமைப்பதற்காக புல்டோசர் மற்றும் எந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் நடக்கிறது. 10-க்கும் மேற்பட்ட புல்டோசர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கான்கிரீட் பீம்கள், சுவர்கள், தரைதளம் அமைக்கப்பட்டு வருகின்றன.


    இந்த பணிகள் அனைத்தும் வருகிற டிசம்பர் 5-க்குள் முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ல் நினைவிடத்தை திறப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையொட்டி சமாதி அருகே தடுப்பு வேலிகள், கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகிறார்கள். #MerinaBeach #Jayalalithaa
    ×