search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஞ்சி விபத்து"

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி:

    திருவண்ணாமலை புதுவாணியங்குளம் 8-வது தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது 39) ஆட்டோ டிரைவர். இவரது மகன் விக்னேஷ்(19). பி.காம்.பட்டதாரி.

    நேற்று மாலை இவர்கள் தங்களது சொந்த ஆட்டோவில் செஞ்சி வட்டம் வி.நயம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். ஆட்டோவை அரிகிருஷ்ணன் ஓட்டி சென்றார். ஆட்டோ செஞ்சி அருகே உள்ள செம்மேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து புதுவைக்கு தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென்று ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவர் அரிகிருஷ்ணன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பலத்த காயம்அடைந்த விக்னேஷ் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    செஞ்சி அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செஞ்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மோசவாடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 21). இவரும் இவரது நண்பர்கள் மதி, அன்பு ஆகிய 3 பேரும் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டனர். செஞ்சி அருகே உள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக வேதாரண்யத்தில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிகொண்டு ராணிபேட்டையை நோக்கி லாரி ஒன்று வந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராம் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் மற்றும் மதி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அன்பு படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அன்புவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி அருகே இன்று காலை கார், டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    செஞ்சி:

    சென்னையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42). இவர் வாடகை கார் ஓட்டிவந்தார். நேற்று இரவு அவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை சென்றார்.

    அங்கு ஆட்களை இறக்கி விட்டு மீண்டும் காரில் சென்னைக்கு புறப்பட்டார். இன்று காலை 6.30 மணி அளவில் அவர் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிகோட்டை காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு டேங்கர் லாரி ஒன்று சென்றது. காட்டு பகுதியில் உள்ள குண்டு-குழியான சாலையில் சென்றபோது காரும்-டேங்கர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த செந்தில்குமார் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும், செஞ்சி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காருக்குள் சிக்கி பிணமாக கிடந்த செந்தில்குமாரின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். கார்- டேங்கர் லாரி மோதிய விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
    ×