search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செக்ஸ் டார்ச்சர்"

    நாகை அருகே செக்ஸ் டார்ச்சரால் பெண் பூ வியாபாரியை ரவுடி வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்தவர் ஆனந்தவேலன் (வயது 30). லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.

    சரண்யா அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் திருட்டு குமார் என்கிற கணேஷ்குமார் (வயது29). பிரபல ரவுடியான இவர் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் 4 கொலை வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் சரண்யாவுக்கு அடிக்கடி ரவுடி கணேஷ்குமார், செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது பார்க்கும் போதெல்லாம் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததால் சரண்யா ஆத்திரம் அடைந்தார்.

    இதனால் இந்த பிரச்சினை பற்றி அவர் , தனது கணவர் ஆனந்தவேலனிடம் கூறினார். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த வேலன், தனது நண்பர்கள் சிலருடன் சென்று ரவுடி கணேஷ்குமாரை கண்டித்தார். மேலும் இதுபற்றி வேளாங்கண்ணி போலீசில் புகாரும் செய்தார்.

    இதையடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசில் புகார் கொடுத்ததால் கணேஷ்குமார், ஆனந்தவேலன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஆனந்தவேலன் மனைவி சரண்யா வீட்டில் இருந்தார். அப்போது அங்கு கணேஷ் குமார் கோபத்துடன் வந்தார். வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆனந்தவேலனின் லோடு ஆட்டோவை அடித்து நொறுங்கினார்.

    பின்னர் ஆத்திரம் தீராமல், திடீரென குழந்தை கண்முன்னே சரண்யாவை கணேஷ் குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார்.

    சரண்யா இறந்ததும் அங்கிருந்து கணேஷ்குமார் தப்பி ஓடி விட்டார்.

    இதற்கிடையே மனைவி இறந்த தகவல் அறிந்து ஆனந்தவேலன், மற்றும் அவரது தாய் விரைந்து வந்து இறந்துகிடந்த சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை வெட்டிக் கொலைசெய்த கணேஷ்குமாரை வலைவீசி தேடி வந்தனர்.

    இநத நிலையில் கணேஷ்குமார் போலீசாருக்கு பயந்து தனது வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்தார். இதையறிந்த போலீசார் நேற்று இரவு வீட்டில் இருந்த கணேஷ்குமாரை கைது செய்தனர்.

    செக்ஸ் டார்ச்சரால் பெண் பூ வியாபாரியை ரவுடி வெட்டி கொன்ற சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொடைக்கானலில் தற்கொலை செய்து கொண்ட கேரள பெண் வழக்கில் கைதானவர் வெளியில் நடமாடுவதாக எழுந்த பிரச்சினையால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் எம்.எம். தெருவைச் சேர்ந்தவர் ரோகினி (வயது 42). கேரளாவைச் சேர்ந்த இவர் தனது கணவர் மற்றும் 9 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் மற்றும் 2 மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். 7 மகள்களுடன் ரோகினி தனியாக வசித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

    தான் இறப்பதற்கு முன்பாக கைப்பட கடிதம் எழுதி வைத்து தனது தற்கொலைக்கு ஜெயசீலன் மட்டுமே காரணம் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து 3 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த ஜெயசீலனை போலீசார் பிடித்து சென்றனர்.

    கைதான ஜெயசீலன் நேற்று கொடைக்கானல் நகரில் சுற்றி வந்ததாகவும் அதன் பிறகு அவரது வீட்டில் மனைவி மற்றும் மகள்களை பார்க்க வந்ததாகவும் தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அவரது வீட்டு முன்பு ஏராளமான பெண்கள் குவிந்தனர். வீட்டுக்குள் இருக்கும் ஜெயசீலனை வெளியே அனுப்புமாறு அவர்கள் சத்தம் போட்டனர். இதனால அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஜெயசீலனை கைது செய்து விட்டதாக கூறிய போலீஸ் அவரை தற்போது வெளியில் நடமாட விட்டுள்ளனர். அவர் வீட்டுக்குள் ஒளிந்திருந்ததை நாங்கள் பார்த்தோம்.

    எங்களை பார்த்தவுடன் தப்பி அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் பிடியில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரது கொடுமையால் இது வரை பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் போராட்டம் நடத்திய பெண்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    எனவே ரோகினியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என ஆவேசமாக கூறினர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ×