என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகை அருகே செக்ஸ் டார்ச்சரால் பெண் பூ வியாபாரி வெட்டி படுகொலை- ரவுடி கைது
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்தவர் ஆனந்தவேலன் (வயது 30). லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.
சரண்யா அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் திருட்டு குமார் என்கிற கணேஷ்குமார் (வயது29). பிரபல ரவுடியான இவர் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் 4 கொலை வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் சரண்யாவுக்கு அடிக்கடி ரவுடி கணேஷ்குமார், செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது பார்க்கும் போதெல்லாம் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததால் சரண்யா ஆத்திரம் அடைந்தார்.
இதனால் இந்த பிரச்சினை பற்றி அவர் , தனது கணவர் ஆனந்தவேலனிடம் கூறினார். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த வேலன், தனது நண்பர்கள் சிலருடன் சென்று ரவுடி கணேஷ்குமாரை கண்டித்தார். மேலும் இதுபற்றி வேளாங்கண்ணி போலீசில் புகாரும் செய்தார்.
இதையடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசில் புகார் கொடுத்ததால் கணேஷ்குமார், ஆனந்தவேலன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஆனந்தவேலன் மனைவி சரண்யா வீட்டில் இருந்தார். அப்போது அங்கு கணேஷ் குமார் கோபத்துடன் வந்தார். வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆனந்தவேலனின் லோடு ஆட்டோவை அடித்து நொறுங்கினார்.
பின்னர் ஆத்திரம் தீராமல், திடீரென குழந்தை கண்முன்னே சரண்யாவை கணேஷ் குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார்.
சரண்யா இறந்ததும் அங்கிருந்து கணேஷ்குமார் தப்பி ஓடி விட்டார்.
இதற்கிடையே மனைவி இறந்த தகவல் அறிந்து ஆனந்தவேலன், மற்றும் அவரது தாய் விரைந்து வந்து இறந்துகிடந்த சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை வெட்டிக் கொலைசெய்த கணேஷ்குமாரை வலைவீசி தேடி வந்தனர்.
இநத நிலையில் கணேஷ்குமார் போலீசாருக்கு பயந்து தனது வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்தார். இதையறிந்த போலீசார் நேற்று இரவு வீட்டில் இருந்த கணேஷ்குமாரை கைது செய்தனர்.
செக்ஸ் டார்ச்சரால் பெண் பூ வியாபாரியை ரவுடி வெட்டி கொன்ற சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்