search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவாணி"

    • நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • சிறுவாணி அணையின் நீர், மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

    கோவை:

    கோவை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் நீர், மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்ததால், அணையின் நீர்மட்டமானது 874 மீட்டர் வரை உயர்ந்தது.சிறுவாணி அணையைப் பராமரிக்கும் கேரள அரசு பாதுகாப்பு காரணமாக அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை அடைய விடாமல், அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டது.

    இதன் காரணமாக, 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்ட வில்லை. அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 871 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரிய தொடங்கியது.

    இந்த நிலையில் , தற்போது, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், அணைக்கு செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த வாரத்தில் 870.10 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 871.20 மீட்டராக உயர்ந்துள்ளது.

    இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 20 நாள்களாக இடைவெளிவிட்டு மழை பெய்துவருகிறது. இதனால் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×