search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை பலி"

    • 2 மாநில வனத்துறையினர் விசாரணை
    • பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம் செல்லும் சாலையில் உள்ள பத்தலப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது.

    இதனால அந்த வழியாக செல்லும் போது மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். பெரும்பாலானோர் அந்த வழியில் இரவு நேரத்தில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர வனப்பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் பெண் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிறுத்தை உயிரிழந்த பகுதி ஆந்திர வனப்பகுதி என்பதால் இது குறித்து ஆந்திர மாநில வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த ஆந்திர மாநில வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த சிறுத்தையை கொண்டு சென்றனர். இது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
    • சிறுத்தைக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்தது.

    போபால்:

    நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு சிறுத்தை மத்தியபிரதேசம் போபாலில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த சிறுத்தைக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த சிறுத்தை நேற்று பரிதாபமாக இறந்தது. இதனை வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர். இடமாற்றம் காரணமாகவும், சிறுநீரக பாதிப்பாலும் சிறுத்தை இறந்ததாக கூறப்பட்டது.

    • சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலியானது
    • வனத்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தடா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளது. இதுகுறித்து ஆதிவாசி மக்கள் நீலகிரி வடக்கு வனச்சரக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன்பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்கா ராம் போஸ்லே, உதவி வன அலுவலர் சரவணன் மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுருக்கு கம்பி வைக்கப்பட்ட இடம் மற்றும் மர்ம நபர்களை தேடும் பணி முடக்கி விடுபட்டு உள்ளது. இந்தநிலையில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தவும் வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி இன்று (நேற்று) சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

    பொதுவாக விவசாய நிலங்களில், காட்டுப்பன்றி, முயல் உட்பட விலங்குகள், பயிரை நாசப்படுத்துவதை தவிர்க்க, சுருக்கு வேலிகளை அமைத்து உள்ளனர். மேலும் வேட்டைக்காகவும் சுருக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரோ வைத்த சுருக்கில், சிறுத்தையின் வயிற்றுப்பகுதி சிக்கியுள்ளது. விலங்குகளுக்கு சுருக்கு வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

    இந்த நிலையில் சிறுத்தை இறந்து கிடந்த இடத்தின் அருகே மான் ஒன்று இறந்த நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தை மற்றும் மானின் உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இறந்த சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

    • சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலியானது
    • வனத்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தடா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளது. இதுகுறித்து ஆதிவாசி மக்கள் நீலகிரி வடக்கு வனச்சரக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன்பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்கா ராம் போஸ்லே, உதவி வன அலுவலர் சரவணன் மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுருக்கு கம்பி வைக்கப்பட்ட இடம் மற்றும் மர்ம நபர்களை தேடும் பணி முடக்கி விடுபட்டு உள்ளது. இந்தநிலையில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தவும் வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி இன்று (நேற்று) சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

    பொதுவாக விவசாய நிலங்களில், காட்டுப்பன்றி, முயல் உட்பட விலங்குகள், பயிரை நாசப்படுத்துவதை தவிர்க்க, சுருக்கு வேலிகளை அமைத்து உள்ளனர். மேலும் வேட்டைக்காகவும் சுருக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரோ வைத்த சுருக்கில், சிறுத்தையின் வயிற்றுப்பகுதி சிக்கியுள்ளது. விலங்குகளுக்கு சுருக்கு வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

    இந்த நிலையில் சிறுத்தை இறந்து கிடந்த இடத்தின் அருகே மான் ஒன்று இறந்த நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தை மற்றும் மானின் உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இறந்த சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

    ×