search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சய் பாங்கர்"

    ஓபனிங் மற்றும் 6-வது இடத்தில் களம் இறங்குவது யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பிரித்வி ஷா, விராட் கோலி, புஜாரா, விஹாரி அரைசதம் அடித்து அசத்தினார்கள். லோகேஷ் ராகுல் மட்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    நேற்றைய ஆட்ட நேரம் முடிந்தபின்னர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேட்டியளித்தார். அப்போது ஓபனிங் மற்றும் 6-வது இடத்தில் யார் களம் இறங்குவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘இன்னும் சில இடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்பதை நான் உறுதியாக கூறுவேன். முதல் இன்னிங்சில் 358 ரன்கள் அடித்துள்ளோம். 2-வது இன்னிங்சில் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை கவனமாக ஆராய இருக்கிறோம். அதனடிப்படையில்தான் முடிவு செய்யப்படும்.

    மற்ற பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக டாப் ஆர்டரில் களம் இறக்கினோம். சில இடங்கள் உதியாகிவிட்டது. ஒபனிங்கில் யாரை களம் இறக்குவது, 6-வது இடத்தில் யாரை களம் இறக்குவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இதுவரை அந்த இடத்திற்கான வீரர்களை நாங்கள் முடிவு செய்யவில்லை.’’ என்றார்.
    இங்கிலாந்து தொடரை இழந்தது குறித்து ரவி ஷாஸ்திரி, பாங்கர் பதில் அளிக்காவிடில் வெளிநாட்டு தொடரை வெல்லது இம்பாசிபில் என கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இங்கிலாந்து மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை.

    தற்போதைய இந்திய அணியால் இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்ற முடியும் என்று முன்னாள் வீரர்கள் நம்பினார்கள். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், மோசமான பேட்டிங்கால் இந்தியா தோல்வியை சந்தித்ததால், அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு ரவி ஷாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்வது இயலாத காரியம் ஆகிவிடும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள இந்திய வீரர்களின் பேட்டிங் திறமை குறைந்து விட்டது என்று நம்புகிறேன். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. புஜாரா அல்லது ரகானே ஆகியோரிடம் உறுதிப்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டது. நான்கு வருடத்திற்கு முன்பு, அடிலெய்டில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த உத்வேகம் இந்த தொடரில் இல்லை. புஜாராவிற்கும் அப்படித்தான்.

    ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடியபோது மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதற்கு தலைமை பயிற்சியாளரான ரவி ஷாஸ்திரி முழு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பதில் அளிக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்வது நடக்கக்கூடிய விஷயமாக இருக்காது’’ என்றார்.
    ×