search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்திவேல்"

    • திருப்பூரை பொறுத்தவரை வரி செலுத்தக்கூடிய தொழில் துறையினர் அதிகம் இருக்கிறார்கள்.
    • கடந்த காலங்களில் வருமான வரித்துறை ஏற்றுமதியாளர்களுக்கு உகந்ததாக இல்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில், வருமான வரி செலுத்துபவர்களுக்கான கார்ப்பரேட் இணைப்பு திட்டம் கருத்தரங்கு நடைபெற்றது. வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கோவை வருமான வரித்துறை இணை ஆணையர் ஸ்ரீ விஜய் வரவேற்றார்.கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்கள் பேசினர். இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் பேசியதாவது :- கடந்த காலங்களில் வருமான வரித்துறை ஏற்றுமதியாளர்களுக்கு உகந்ததாக இல்லை. தற்போது அந்தக் காலச் சூழ்நிலை மாறி நம்முடன் ஒன்றாக இணைந்து பயணிக்க கூடிய நட்பு சூழல் உருவாகியுள்ளது.திருப்பூரில் உள்ள ஆடிட்டர்கள் 24 மணி நேரமும் அவரவர் முதலா ளிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடிய நல்லுள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முன்னர் இருந்ததை காட்டிலும் தற்போது உற்பத்தி தேவை அதிகரித்துள்ளது.

    வருமான வரி துறையினரின் அதிகாரிகள் அனைத்து வகையிலும் உற்பத்தியாளர்களுடன் நல்லுறவை வைத்துள்ளனர். ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் நல்ல ஆதரவை தருகின்றனர். திருப்பூரை பொறுத்தவரை வரி செலுத்தக்கூடிய தொழில் துறையினர் அதிகம் இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசியதாாவது :- வருமான வரித்துறையினர் சில மாற்றங்களை நிச்சயமாக செய்து தர வேண்டும். உள்நாட்டு வர்த்தகம், 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அரசுக்கும் தொழில்துறையினருக்கும் மிகுந்த நல்லுறவை இது ஏற்படுத்தியுள்ளது. உலக சுற்றுச்சூழல் பசுமை திட்டத்தை நோக்கி திருப்பூர் வேகமாக பயணிக்கிறது.

    தொழில்நுட்ப காரணங்கள் பல்வேறு வகையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிப்பில் உள்ள டிரேசஸ் டிமாண்ட்களை வட்டி மற்றும் கால தாமத அபராததொகை இல்லாமல் செலுத்துவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு நிறுவனங்களிடம் இருந்து வரும் இன்வாய்ஸ்களுக்கு, 45 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் செலவுத் தொகையை உரிமை கோர முடியாத நிலையில் உள்ளது. வரி செலுத்தக்கூடிய சுழற்சி முறை150 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை இருப்பதால் ஜி.எஸ்.டி., விதிகளில் இருப்பதை போல 180 நாட்கள் வரை கால அவகாசம் தந்தால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்றார்.

    • இந்திய தொழில்துறைக்கு, உலகம் முழுவதும் பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
    • இந்தியா-கனடா இடையே வரியில்லாத ஒப்பந்தம் உருவாக சிறப்பு முயற்சி எடுத்துள்ளோம்.

    திருப்பூர்:

    வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் நோக்குடன் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்த 10 நாட்களாக பல்வேறு நாடுகளுக்கு பயணமானது. இதில் திருப்பூரை சேர்ந்த இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேலும் பங்கேற்றார்.

    பிரான்ஸ் உச்சி மாநாடு, இந்தியா- இத்தாலி வர்த்தக கலந்துரையாடல், ஐரோப்பா மற்றும் இந்தோ - பசிபிக் அமர்வு, இந்தியா -இத்தாலி தலைமை நிர்வாகிகள் கலந்துரையாடல், கனடாவில் நடந்த வரியில்லா வர்த்தக ஒப்பந்த ஆலோசனை, நியூயார்க்கில் நடந்த வட்டமேஜை மாநாடு, தென்கிழக்கு அமெரிக்காவில் நடந்த 'பாஸ்ட்னர்ஸ்' கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இக்குழுவினர் பல்வேறு வர்த்தக கூட்டமைப்பினர் மற்றும் அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேசினர்.

    இது குறித்து 'பியோ' தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    இந்திய தொழில்துறைக்கு, உலகம் முழுவதும் பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வளர்ந்து வரும் நிலையில், சவால்களை எதிர்கொள்ள பல்வேறு நாடுகளும் இந்தியாவுடன் கரம்கோர்க்க முன்வந்துள்ளன.பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கிடைத்துள்ளது.

    வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏற்றுமதி 3 மடங்கு உயருமென நம்பிக்கை பிறந்துள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா எண்ணற்ற உற்பத்தி ஆற்றலை கொண்டுள்ளதாக வளர்ந்த நாடுகள் பாராட்டியுள்ளன.

    இந்தியா-கனடா இடையே வரியில்லாத ஒப்பந்தம் உருவாக சிறப்பு முயற்சி எடுத்துள்ளோம். இந்தியாவின் தரம் மற்றும் சேவை மதிப்பை பாராட்டும் வகையில், சீனாவுக்கான கனடா ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி திரும்பும். தொழில் முறை வர்த்தக மேம்பாட்டு பயணம் இந்திய தொழில் துறைக்கு நேர்மறை வளர்ச்சி வாய்ப்புகளை அதிகம் உருவாக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பொய் இன்றி அமையாது உலகு'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

    இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பொய் இன்றி அமையாது உலகு'. இதில் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் சாக்ஷி அகர்வால், ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


    பொய் இன்றி அமையாது உலகு

    பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை பேட்டை' வசந்த் இசையமைத்திருக்கிறார். காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் இணைந்து தயாரித்திருக்கிறது.


    பொய் இன்றி அமையாது உலகு

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.


    பொய் இன்றி அமையாது உலகு

    'பொய் இன்றி அமையாது உலகு' திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, '' நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள். அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும்.


    பொய் இன்றி அமையாது உலகு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது. இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற 'லவ் டுடே' படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக 'பொய் இன்றி அமையாது உலகு' தயாராகி இருக்கிறது'' என்று கூறினார்.




    • 'மிரள்’ திரைப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.
    • இந்த படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    மிரள்

    இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார்.


    மிரள்

    ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள "மிரள்" திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.



    • பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் மிரள்.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    மிரள்

    இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார்.


    மிரள்

    ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள "மிரள்" திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள படம் “மிரள்”.
    • இப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டனர்.

    இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    மிரள்

    இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர் .

    ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார். ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள "மிரள்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


    மிரள்

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெட்கட் பிரபு தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • இந்தியா நிட்பேர் அசோசியேசன், சார்பில் கண்காட்சி வருகிற 12 முதல் 14-ம் தேதி நடைபெறுகிறது.
    • 6 ஆண்டுகளுக்கு பிறகு, 'இந்தியா சர்வதேச நிட்பேர்' பிரமாண்டமாக அமையும்.

    திருப்பூர் :

    பியோ தலைவர் சக்திவேல் நேற்று நிருபர்களு க்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்பூர் அவினாசி அருகே இந்தியா நிட்பேர் அசோசியேசன், சார்பில் கண்காட்சி வருகிற 12 முதல் 14-ம் தேதி நடைபெறுகிறது.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், தற்போது சாதகமான சூழல் நிலவுகிறது. வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், இந்திய ஜவுளி பொருட்களையே அதிகம் விரும்பி வாங்குவதாக ஏஜன்சிகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் போட்டி நாடுகளில் பல்வேறு சவால் இருப்பதால், இந்தியாவுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு, பங்களா தேஷில் இருந்து ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்தியா – ஐரோப்பிய நாடுகளுடனான, வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம், தீபாவளிக்கு முன்னதாக ஒப்பந்தமாகும். அதற்கு பிறகு, பங்களாதேஷ் ஆர்டர்கள், இந்தியாவுக்கு வந்துவிடும். அடுத்ததாக, கனடாவுடனும், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வா ய்ப்புள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு, பிரகாசமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது. திருப்பூர் தொழில்துறை பயன்பெறும் வகையில், 'மெகா டெக்ஸ்டைல் பார்க்' உள்ளிட்ட திட்டங்களும் அமலுக்கு வரஇருக்கின்றன.

    6 ஆண்டுகளுக்கு பிறகு, 'இந்தியா சர்வதேச நிட்பேர்' பிரமாண்டமாக அமையும். வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறினாலும், வெளிநாட்டு வாடிக்கையா ளரின் ஆதரவாலும், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தில், 25 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கிடைக்கும். சாதகமான சூழலில் நடக்கும் 48 வது 'நிட்பேர்' கண்காட்சி ஏற்றுமதி வர்த்தகத்தின் திருப்புமுனையாக அமையும்; வர்த்தக வாய்ப்பு 5 சதவீதம் அதிகரிக்கும். ஏற்றுமதி வர்த்தகத்தில், பிரகாசமான எதிர்காலம் உருவாக இருப்பதால், உற்பத்தி திறனை மேம்படுத்தி, ஏற்றுமதியாளர்களும் தங்களை தயார்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

    இதில் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×