என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை பள்ளி மாணவி தற்கொலை"

    கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கோவை:

    கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியால் வேறு எந்த மாணவியும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது பற்றி விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக 5 நாள் காவல் கேட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், மிதுன் சக்கரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவரை வேனில் ஏற்றி சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முன்னதாக இந்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்ககோரி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா ஜாக்சன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.


    தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த மற்ற 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை:

    கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கோவை மேற்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா? தற்கொலைக்கு முன்பு மாணவி யார், யாரிடம் பேசினார் என பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்கொலை செய்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்தும், பழைய பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்டு மாணவி கொடுத்த விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் சரியாக பொருந்தவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மாணவியின் நோட்டு புத்தகங்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் நேற்று மாணவி வீடு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனின் அறை, மாணவியின் ஆண் நண்பர் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாணவியின் வீட்டில் இருந்து நோட்டு புத்தகங்கள், மடிக்கணினி ஆகியவற்றை எடுத்து சென்றனர். அதில் உள்ள கையெழுத்தையும், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்ததும் ஒன்று தானா? என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் மாணவியின் நண்பர் மற்றும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வீட்டில் இருந்து தலா ஒரு செல்போன் என 2 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த மற்ற 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவி தற்கொலை செய்து கொண்டதும், சமூக வலைதளமான யூடியூப் சேனல்களில் மாணவியின் புகைப்படம், முகவரி, பெயர் போன்ற விவரங்களுடன் பலரும் செய்திகளை பரவவிட்டனர். பாலியல் தொல்லையில் மாணவி இறந்ததால் அவரது பெயர், புகைப்படங்களை வெளியிட்டதாக கூறி 48 யூடியூப் சேனல்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    விரைவில் அந்த 48 சேனல்கள் மீதும் வழக்குப்பதியப்பட்டு, அதனை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகின்றனர்.

    கோவை பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர் வைத்ததாக கவுதம் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
    கோவை:

    கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் மாணவி சாவுக்கு நீதி கேட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர் வைத்ததாக கவுதம் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியிலும், ஈஸ்வரன் கோவில் வீதி பகுதியிலும் மாணவி சாவுக்கு நீதி கேட்டு பேனர் வைத்ததாக தமிழ்நாடு ஆரிய வைசிய சங்கம் மீது உக்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    மாணவியின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    கோவை:

    கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மாணவி ஆசிரியர் ஒருவரின் தொடர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவி 11-ம் வகுப்பு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்தார். அப்போது அங்கு பணியாற்றிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (வயது 31) என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவி எழுதிய கடிதமும் சிக்கியது. அதனடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    தொடர்ந்து, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி வீட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி, வருகிற 26-ந் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி திருப்பூர் மாவட்டம் உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்துள்ளார். ஆனாலும் பள்ளி முதல்வர் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் (52) என்பவர் மீதும் நேற்று முன்தினம் காலையில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பெங்களூருவில் இருந்த மீரா ஜாக்சனை கைது செய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 

    இந்த நிலையில்,  பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில்,  முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

    மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்த போது, அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன்சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்தனர். ஆனால் உறவினர்கள், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு துணை கமி‌ஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    பள்ளி முதல்வரிடம், ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவி உங்களிடம் தெரிவித்தும், நீங்கள் ஏன் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும் பாலியல் தொல்லை தெரிந்ததும், போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் மையத்திற்கு தகவல் தெரிவிக்காது ஏன்? அதற்கு என்ன காரணம். யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டாம், வெளியில் சொல்ல வேண்டாம் என உங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்களா? கைது செய்யப்பட்ட ஆசிரியர் இந்த மாணவியை போன்று வேறு யாராவது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? அது குறித்து யாராவது புகார் உங்களிடம் தந்தார்களா? இதில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? அது குறித்த தகவல் உங்களுக்கு தெரியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். அதற்கு மீரா ஜாக்சனும் பதில் அளித்துள்ளார். அதனை போலீசார் வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    காலையில் தொடங்கிய விசாரணை இரவு வரை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    விசாரணை முடிந்ததும் போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கோவை சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து துணை கமி‌ஷனர் ஜெயச்சந்திரன் கூறுகையில், மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்தா? என விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள துண்டு சீட்டு மற்றும் வாட்ஸ்- அப் ஆதாரங்கள், ஆடியோ உரையாடல்களை வைத்தும் அடுத்தகட்ட விசாரணை நடக்கிறது. மாணவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்து வருகிறோம். இதுதவிர மாணவி எழுதிய துண்டு சீட்டில் உள்ள பெயர்கள், விவரங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. சக மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம் என்றார்.

    மாணவியை இழந்த பெற்றோர் தங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், தங்கள் மற்ற குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

    கோவை:

    கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள இறந்த மாணவியின் வீட்டிற்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் சென்றனர். அவர்கள் மாணவியின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடக்கக் கூடாத காரியம் சில நாட்களுக்கு முன்பு நடந்துவிட்டது. இன்றைக்கு நடந்துள்ள இந்த இழப்பானது எங்கோ தமிழகத்தின்ஒரு மூலையில் நடந்தது என்று நான் பார்க்கவில்லை. மாறாக என்னுடைய சொந்த பெண் இந்த நிலைமைக்கு ஆளாகி இருந்தால் எப்படிப்பட்ட நிலையில் இருப்பேனோ அந்த மனநிலையில் தான் நான் தற்போது இங்கு வந்துள்ளேன்.

    இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பள்ளி முதல்வரையும் கைது செய்துள்ளோம்.

    கைதான பள்ளி முதல்வர்

    போக்சோ சட்டம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை. அரசு பள்ளியை போல் தனியார் பள்ளிகளிலும் அந்தந்த ஆசிரியர்கள் மூலம் ஒரு மணி நேரம் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பாலியல் தொல்லைக்கு ஆளாகும் மாணவர்கள் அரசின் உதவி எண்ணிற்கு அழைத்து தகவலை தெரிவிக்கலாம்.

    தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவது எங்களுடைய கடமை. அதனை நாங்கள் செய்வோம்.

    மாணவியை இழந்த பெற்றோர் தங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், தங்கள் மற்ற குழந்தையை படிக்க வைக்க வேண்டும். மேலும் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவி எழுதியதாக கூறப்படும் அந்தக் கடிதம் எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் உள்ளது. அது மாணவியின் கையெழுத்து தானா? என்பதை அறிய அவரது பெற்றோரிடம் விசாரிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் மகள் கையெழுத்து என்று கூறினால் அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதையும் படியுங்கள்...மழை நின்று 2 நாட்கள் ஆன பிறகும் சென்னையில் 70 தெருக்களில் தண்ணீர் இன்னமும் தேங்கியுள்ளது

    பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.
    கோவை:

    கோவையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், இதுதொடர்பாக மாணவி புகார் அளித்தும் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மீரா ஜாக்சன் தலைமறைவானதை அடுத்து அவரைப் பிடிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், பெங்களூரு தனிப்படை போலீசார் மீரா ஜாக்சனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவரை,  இன்று மாலை கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (மேற்கு) அழைத்து வரப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    மாணவி தற்கொலை விவகாரத்தில் வேறு யாரும் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் கூறினார்.
    கோவை:

    கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மாணவி தற்கொலை விவகாரத்தில் வேறு யாரும் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் கூறினார்.

    உயிரிழந்த மாணவியின் பெற்றோரை கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவி புகார் அளித்தும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவரைப் பிடிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 
    சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
    சென்னை:

    கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறை முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறை முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு நீதி வேண்டும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து கொண்டு மாணவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

    இதேபோல் கோட்டைமேடு, பெருமாள் கோவில் பகுதியில் மாணவியின் வீட்டின் முன்பு 200-க்கும் அதிகமானோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    மாணவி தற்கொலை வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
    கோவை:

    கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் இந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை. வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் மாணவி கூறி உள்ளார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர்.

    இந்தநிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (வயது 31) உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

    கைது

    பின்னர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் நேற்று மாலை கைது  செய்தனர். 

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இரவு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிரியரை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர். 

    தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவியின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்  வாங்க மறுத்து விட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்களது மகளுக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து நாங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவரும் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக உள்ளார். அவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து மேற்கு அனைத்து மகளிர் போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அந்த 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் மாணவியின் தற்கொலைக்கும் காரணம் உள்ளதா? அவர்கள் மாணவிக்கு ஏதாவது தொல்லை கொடுத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×