என் மலர்
நீங்கள் தேடியது "கொட்டிய தேனீக்கள்"
- திடீரென மைதானத்தில் நுழைந்த தேனீக்கள் கூட்டம் வீரர்கள், நடுவர்களை தாக்கியது.
- தேனீக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியின்போது கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா (65), நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்கள், நடுவர்களை தாக்கியது. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணிக் குப்தா மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக கான்பூர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், வீரர்களும் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் அம்பயர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- குன்னூர் சிம்ஸ் பூங்கா தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியது.
- மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் நூற்றுகணக்கானோர் வந்து செல்கின்றனர். நீலகிரிக்கு மற்ற நாட்களை விட வெயில் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
சுற்றுலா பயணிகள்
இதில் ஊட்டி படகு இல்லம், ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி தேயிலை தோட்டம், சூசைட் பாயிண்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்வார்கள்.
இந்த நிலையில் வழக்கம் போல இன்றும் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து கொண்டு இருந்தனர்.
அப்போது பூங்காவில் இருந்த மரத்தில் இருந்த தேன் கூடு திடீரென எவ்வாறோ கலைந்தது. அதில் இருந்து வெளியேறிய தேனீகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கொட்ட தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
துரத்தி துரத்தி கொட்டியது
ஆனால் அவர்களை தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியது. இதனால் பலர் காயம் அடைந்தனர். சில குழந்தைகளும் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த பூங்கா நிர்வாகத்தினர் அங்கு வந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர்.
காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பூங்காவில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பூங்கவில் இருந்து வேலையாட்களும் வெளியேற்றப்பட்டு அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.
பூங்காவில் தேனீக்கள் சுற்றுலா பயணிகளை தாக்கி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






