என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா பஸ்"
- திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கேரள நடிகைகள் கூட்டமைப்பு முடிவு
- பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பப்பட்டது
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பியதை கண்டித்து பெண் பயணி ஒருவர் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து படம் பாதியில் நிறுத்தபப்பட்டது.
இதனால் படத்தை ஆர்வமுடன் ரசித்து பார்த்து வந்த சில ஆண் பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த பெண் பயணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாள் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.
நடிகை பாலியல் வழக்கு தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள சமயத்தில் கேரளாவில் இச்சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
- அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் கோரிக்கை
- பேச்சிப்பாறை, திற்பரப்பு பகுதிகளில் தினமும் 2 கேரளா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட நிர்வாகத்தினருக்கு, அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, திற்பரப்பு பகுதிகளில் தினமும் 2 கேரளா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அதில் திற்பரப்பில் இருந்து செல்லும் பஸ் திருவனந்தபுரம் காயங்குளம் வரைக்கும் பேச்சிப்பாறையில் இருந்து செல்லும் பஸ் திருவனந்தபுரம் பஸ் நிறுத்தம் வரைக்கும் சென்று கொண்டு இருந்தது.
குலசேகரம், பேச்சிப்பாறை, திற்பரப்பு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள், தேன் பெட்டி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் இங்கிருந்து கேரளாவிற்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் உறவுகாரர்கள் கேரளாவில் தான் உள்ளனர்.
கேரளாவில் உள்ள உயர்தர தனியார் ஆஸ் பத்திரிகளுக்கு சிகிச்சை பெறுவதற்கும் இங்கியிருந்து தான் அதிக அளவு பொது மக்கள் கேரளாவுக்கு சென்று வருகிறார்கள். ஏழை நடுத்தர மக்கள் இங்கிருந்து செல்வதற்கு கேரளா பஸ்சில் தான் பயணித்து வந்தார்கள். இந்த 2 பஸ்களும் கொரோனா காலத்தில் நிறுத்திவிட்டார்கள். அதன் பிறகு இதுவரைக்கும் கேரளா பஸ்கள் இயக்கப்படவில்லை.
தற்போது தமிழக பேருந்துகள் பேச்சிப்பாறை, திற்பரப்பில் இருந்து தலா ஒரு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் கேரளா போக்குவரத்து துறையிடம் பேசி நிறுத்தப்பட்ட 2 பஸ் களை மீண்டும் பேச்சிப்பாறை, திற்பரப்பு ஆகிய பகுதிகளுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






